Home Latest News Tamil கடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக...

கடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

பொன் மாணிக்கவேல்

கடத்தப்பட்ட சிலைகளை அதிரடியாக மீட்டவரும், சிலை கடத்தல்களில் ஈடுபட்ட பல அரசியல்வாதிகளையும் மற்றும் பெரும்புள்ளிகளையும் தனது நேர்மையான செயல்பாடுகளால் பயமுறுத்தி வந்த ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன் மாணிக்கவேல் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடத்தப்பட்ட கடவுள் சிலைகள் தொடர்பான வழக்குகள்

ஓய்வு பெற்ற ஐ.ஜீ பொன்மாணிக்கவேல் அவர்கள் கடத்தப்பட்ட கடவுள் சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு அதிகாரியாக ஓர் ஆண்டு பணிபுரிய நியமிக்கப்பட்டார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணிஓய்வு பெற்றவர்.

நேர்மையான அதிகாரியாக திகழும் பொன்மாணிக்கவேல்

இந்தியாவின் நேர்மையான அதிகாரியாக கருதப்படும் இவர், காவல் துறையில் வளர்ந்து வருபவர்களுக்கு முன் உதாரமாக திகழ்கிறார். கடத்தப்பட்ட பல சிலைகளை மீட்ட இவர் பாரபட்சமின்றி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் கவனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பொதுமக்கள் உட்பட பல தரப்பினரும் கடவுளிடம் வேண்டிவருகின்றனர்.

Previous articleபெண் இன்ஸ்பெக்டரை மாற்ற வேண்டும்: பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன்!
Next articleதொகுப்பாளராகும் தமன்னா! சம்பளம் இத்தனை கோடியா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here