Home Latest News Tamil வெயிலைக் கண்டு பயமா? ஏசி குடைகள் வந்துவிட்டது!

வெயிலைக் கண்டு பயமா? ஏசி குடைகள் வந்துவிட்டது!

532
0
ஏசி குடைகள், AC Umbrella

வெயிலைக் கண்டு பயமா? ஏசி குடைகள் வந்துவிட்டது!

நம்ம ஊரில் அடிகின்ற வெயிலுக்கு அம்பர்லா உடன் சென்றாலும் உச்சந்தலைக்குள் நச்சென்று இறங்குகிறது வெயிலின் உஷ்ணம்.

2 ரூபாய் கொடுத்து நல்ல கூலிங் வாட்டர் பாக்கெட்டை வாங்கி தலையை நனைத்துக்கொண்டு வெயிலை சமாளிப்பவர்கள் அதிகம்.

கண்கள் கூடத் தெரியாத அளவுக்கு இழுத்துப்போர்த்திக்கொண்டு பெண்கள் வெளியில் வந்தாலும் வெயிலின் உக்கிரத்தால் வியர்வையில் குளித்துவிடுவார்கள்.

தற்பொழுது கோடை வெயிலை சமாளிக்க ஏசி குடைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வருடக் கோடை வெயிலுக்கு இந்தியாவில் இந்தக்குடைகள் அதிகம் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணக் குடை போன்றே இருக்கும். குடையின் உள்உச்சியில் விசிறி உள்ளது. பேட்டரி கொண்டு இயங்குகிறது. கைப்பிடிக்கும் இடத்தில் ஒரு வாட்டர் பாட்டிலை சொருகும் வசதியும் உள்ளது.

கூலிங் இல்லாத தண்ணீர் என்றால் ஏர்கூலர் அளவிற்கு கூலிங் கிடைக்கும். அதுவே கூலிங் தண்ணீர் என்றால் ஏசி அறைக்குள் இருக்கும் உணர்வு இருக்கும்.

இந்த நவீனக் குடையின் விலை 1000 முதல் 3000 வரை இந்தியாவின் ஆன்லைன் தளங்களில் விற்கப்பட்டு வருகிறது.

கீழே குடை பற்றிய வீடியோ உள்ளது பார்க்கவும்.

Previous articleதுவம்சம் செய்த ரஸல்: மன்கட் அஸ்வின் இப்போ மங்கூஸ் அஸ்வின்
Next articleகுழப்பமான கேம் ஆஃப் த்ரோன்ஸின் (Game of Thrones) குடும்பங்களைப் பற்றிய ஒரு பார்வை
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here