Home Latest News Tamil அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடல், பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று...

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடல், பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அடுத்து நடவடிக்கை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருச்சி: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிப்பதற்காக மூடப்பட்டது. கூட்டுறவுத்துறை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை தொடர்ந்து கனவருக்கும் கொரோனா தொற்று

தகவல்களின் படி, பதிவுத்துறையில் வேலை பார்க்கும் கூட்டுறவத்துறை பணியாளரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு நாட்கள் கழித்து இவருக்கும் கொரோனா இருப்பது தற்பொது தெரியவந்தது.

சுகாதாரப்பணி காரணமாக ஆட்சியர் அலுவலகம் 3 நாட்கள் மூடல்

அரியலூர் நகராட்சி பணியாளர்கள் 3 நாட்கள் இந்த சுகாதாரப்பணியை தொடர்ந்து மேற்கொள்வார்கள், அதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here