Home நிகழ்வுகள் உலகம் கொரோனா பரவலால் சீனாவிற்கு உலக அளவில் பின்னடைவு

கொரோனா பரவலால் சீனாவிற்கு உலக அளவில் பின்னடைவு

கொரோனா பரவலால்

பிரசல்ஸ்: ஆஸ்திரேலியா கொரோனா பரவல் குறித்து விசாரணையை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது. மேலும் சில நாட்டு அரசாங்கங்கள் சீனாவிடம் நஷ்டஈடு கேட்க திட்டமிட்டுள்ளன. இதுபோல் சீனாவிற்கு உலக அளவில் பல பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

சீன நிறுவனம் தொழில் துவங்க தடை

சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகக் கருதப்படும் ஹுவாவே (Huawei) நிறுவனத்தை தங்கள் நாட்டில் தொழில் துவங்க ஜெர்மனி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தயக்கம் தெரிவித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கொரோனா பரவல் குறித்து சீனா மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதற்காக சீனா தண்டிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறியதற்காகவும், உலகம் முழுவதும் வைரஸ் பரவக் காரணமாக இருந்த காரணத்திற்க்கும் உலக அளவில் சீனா தற்போது பெருத்த பின்னடைவுகளை சந்தித்து வருகிறது.

தீவிர விசாரணை

அமெரிக்க அதிபர் தெரிவிக்கையில் கொரோனா பரவல் குறித்து “தீவிர விசாரணை” நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும் அவர் அமெரிக்க உளவுத் துறையை இந்த வைரஸ் எங்கிருந்து பரவ தொடங்கியது என்பது குறித்தும், சீனாவின் வுகான் மாகானத்தில் இருந்து தவறுதலாக பரவியது உண்மையா? என்பது குறித்தும் ஆய்வு செய்யும்படி அறிவுறுத்தினார்.

மேலும் அவர் தனது நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறந்த ஒவ்வொரு இறப்பிற்க்கும் 10 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்கப்போவதாக தெரிவித்தார்.

ஆக, இந்த கொரோனா வைரஸ் பரவியதற்கு முழு காரணம் சீனா என்று உலக நாடுகளுக்கு ஆதாரம் கிடைத்தால் சீனா அளவிட முடியாத பின்னடைவுகளை சந்திக்க நேரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here