கொரோனா தடுப்பூசி செப்டெம்பர் இறுதியில் வெளிவரும் விலை ரூ.1000, கொரோனா தடுப்பூசி பற்றி புனேவில் இருக்கும் இந்திய ஆராய்ச்சி நிறுவனம் தகவல்.
உலகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனாவைரஸ் பரவலால் உலகமே அச்சம் கொண்டுள்ளது. இதன் பரவலை தடுக்க இயலாமல் திணறி வருகிறது.
இதற்கு தடுப்பூசி கண்டறிய உலகத்தில் இருக்கும் அனைத்து மருத்துவக் குழுக்களும் ஆய்வகங்களும் போட்டி போட்டு முயற்சி செய்து வருகிறது.
100க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தயாராக இருக்கிறது. இந்த நிலையில் புனேயில் இருக்கும் செரும் நிறுவனம் பிரிட்டன் நாட்டுடன் சேர்ந்து மருந்து தயாரித்து வருகிறது.
இந்த ஆய்வின் தலைவர் பூனம் வாலா இதைப்பற்றி கூறுகையில், நாங்கள் தயாரித்த தடுப்பூசி மனிதர்களிடம் செலுதப்பட்டு ஆய்வு நடதப்பட்டு வருகிறது.
வருகிற செப்டெம்பர் இறுதியில் வெளியிடுவோம் என நம்புகிறோம். இதன் விலை தோராயமாக ரூ.1000 இருக்கும்.