Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி

0
340
தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் புதிதாக 771 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் 771 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதனால் இதுவரை உறுதியான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் தொடர்ச்சியாக இன்றும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 324 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் தலைநகரில் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 2328 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மதுரை 111, செங்கல்பட்டு 145, நாமக்கல் 76, திருச்சிராப்பள்ளி 57, தஞ்சாவூர் 63, திருவள்ளூர் 129, நாகப்பட்டினம் 45, விழுப்புரம் 164, தேனி 51,

கரூர் 45, ராணிப்பேட்டை 43, தென்காசி 51, திருவாரூர் 32, தூத்துக்குடி 29, விருதுநகர் 35, கடலூர் 324, வேலூர் 28, சேலம் 35, திருப்பத்தூர் 20,

கன்னியாகுமாரி 17, ராமநாதபுரம் 21, திருவண்ணாமலை 42, சிவகங்கை 12, காஞ்சிபுரம் 87, நீலகிரி 13, பெரம்பலூர் 40, கள்ளக்குறிச்சி 53, அரியலூர் 222, கிருஷ்ணகிரி 4,

புதுக்கோட்டை 3, தர்மபுரி 2, என்ற எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 4,829-ஆக உள்ளது.

இதில் 3,320 பேர் ஆண்களும், 1,507 பெண்களும், 2 திருநங்கைகளும் அடங்குவர். இன்று மட்டுமே தமிழ்நாட்டில் 24-மாவட்டங்களில் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதுவரை 1.88 லட்சம் மாதிரிகள் சோதிக்கப்பட்டுளான.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13, 413 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here