Home நிகழ்வுகள் தமிழகம் கொரோனா எண்ணிக்கை 3-வது நாளாக 1000-ஐ தாண்டியது

கொரோனா எண்ணிக்கை 3-வது நாளாக 1000-ஐ தாண்டியது

305
0
கொரோனா எண்ணிக்கை 3-வது நாளாக 1000-ஐ தாண்டியது

கொரோனா எண்ணிக்கை 3-வது நாளாக 1000-ஐ தாண்டியது. தமிழ்நாட்டில் நேற்று 1,091 பேருக்கு நேற்று கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக நேற்று புதிதாக 1,091 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளுக்குநாள் புதிய நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனால் இதுவரை தமிழ்நாட்டில் உறுதிசெய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 10,558 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த 1,036 பேருக்கும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வந்த 55 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நேற்று பதிவான புதிய கொரோன பாதிப்புகள் எண்ணிக்கை 1,091 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 536 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று 13 பேர் கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை பதிவான மொத்த உயிரிழப்புகள் 197 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவான 1,091 புதிய நோய் தொற்றுகளில் சென்னையில் மட்டும் 806 பேருக்கும், செங்கல்பட்டில் 82 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here