Home நிகழ்வுகள் தமிழகம் உடல்வெப்பச் சோதனைக் கருவி(தெர்மல் ஸ்கேனர்) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

உடல்வெப்பச் சோதனைக் கருவி(தெர்மல் ஸ்கேனர்) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை

உடல்வெப்பச் சோதனைக் கருவி

சென்னை: கொரோனா காரணமாக தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வாடிக்கையாளர்களின் உடலின் வெப்பநிலையை சரிபார்க்க, தங்களுக்கு உடல்வெப்பச் சோதனைக் கருவி(தெர்மல் ஸ்கேனர்) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் என். பெரியசாமி தெரிவிக்கையில் கொரோனா பரவலை தடுக்க கடைபிடிக்கப்படும் நடவடிக்கைகள் மே 16இல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபின் கடைபிடிக்க வழிவகுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கிருமிநாசினிகள் தினசரி கடைகளில் தெளிக்கப்பட வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.

8 புதிய டாஸ்மாக் கடைகள்

சென்னையை அடுத்த திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் 8 டாஸ்மாக் கடைகள் புதன் கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

கொரோனா கட்டுபாட்டு மையங்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here