Home நிகழ்வுகள் தமிழகம் கொரோனா செய்திகள்: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 25,000த்தை தொட்டது

கொரோனா செய்திகள்: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 25,000த்தை தொட்டது

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 25,000த்தை தொட்டது. புதன்கிழமை 1,286 புதிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டன. மாநிலத்தின் மொத்த கொரோனா தொற்று 25,872 என அறிவிப்பு.

*தொடந்து நான்காவது நாளாக 1000த்திற்கும் மேல் புதிய தொற்றுகள் பதிவாயின. சென்னையில் மட்டும் 1,012 புதிய தொற்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*இரண்டு மாத கொரோனா ஊரடங்கிற்கு பின் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் படிப்படியாக ஊரடங்கை தளர்த்தி வருகின்றன.

*தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றங்கள் 6 நாட்களுக்கு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

*தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 208ஆக உள்ளது. இன்று 11 பேர் கொரோனாவால் இறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

*கொரோனா ஊரடங்கால் தமிழகத்தின் கோயில்களுக்கு ரூ.75 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

*தமிழ்நாட்டின் கொரோனா உயிரிழப்பு சதவிகிதம் 0.8% என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here