ராமர் பிள்ளையின் மரண வாக்குமூலம் என்று ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
ராமர் பிள்ளை, நீண்ட நாட்களாக மூலிகை எரிபொருள் கண்டுபிடித்துள்ளேன் என மீடியா முன்பு தோன்றிக்கொண்டே இருந்தார்.
இவருடைய கண்டுபிடிப்பை வெளிக்கொண்டு வரவேண்டும் என லெட்ஸ் மேக் என்ஜினியரிங் சிம்பிள் என்ற குழு முயன்றது.
அவர்களுக்கு சோதனை செய்து காட்டும்போது, ராமர்பிள்ளை ஏமாற்றுவதை கண்டுபிடித்தனர். அதை ஆதாரத்துடன் வீடியோவாகவும் வெளியிட்டனர்.
அதன் பின்னரும் மீடியா முன் தோன்றிய ராமர் பிள்ளை, தன்னுடைய கண்டுபிடிப்பு உண்மை எனக்கூறினார். சீமான் தலைமையில் கண்டிப்பாக வெளியிடுவேன் எனவும் கூறினார்.
LMES குழுவின் நேரடி சவாலிற்கு தயார் என அதிரடியாக அறிவித்தார். ராமர் பிள்ளை இல்லை, இனி ராமர் என அழையுங்கள் எனச் சொன்னார்.
தற்பொழுது யூடியூப் வலைத்தளைத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கும், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் தன்னுடைய கருணை மனு என வீடியோவில் பேசியுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தர ராஜன் இன்னும் பல அரசியல் பிரபலங்களுடன் ரகசியச் சந்திப்பு நடந்ததாகவும் கூறியுள்ளார்.
தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். ராமர் பிள்ளை தொடர்ந்து குழப்பவாதியாகவே உள்ளார்.
யாரோ ஒரு நபரிடம் மூலிகை எரிபொருள் கண்டுபிடித்துள்ளேன் எனக்கூறி பண மோசடி செய்துள்ளார்.
அந்த நபரிடம் இருந்து தப்பிக்கவே, அரசியல் பிரபலங்களை தெரியும் எனக்கூறி ஏமாற்றி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.