Home நிகழ்வுகள் தமிழகம் தஞ்சாவூர் இளைஞர் கொலை; தொடரும் மர்மம் இதுவரை நான்கு பேர் கைது

தஞ்சாவூர் இளைஞர் கொலை; தொடரும் மர்மம் இதுவரை நான்கு பேர் கைது

0
377
தஞ்சாவூர் இளைஞர் கொலை

தஞ்சாவூர் இளைஞர் கொலை; தொடரும் மர்மம் இதுவரை நான்கு பேர் கைது.

தஞ்சாவூர் கீழவாசல் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் அருண்குமார் (27). இவர் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை அரிவாளால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்து வந்த போலீஸ் 4 பேரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

இதில், ஜி. செந்தூர் வேலன் (25), கே. கஜேந்திரன் (23), எஸ். துரை (23), தெற்கு  எம். சாந்தகுமார் (23) ஆகியோரை காவலர்கள் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அருண்குமார் வீட்டில் அனைவரும் வியாழக்கிழமை நள்ளிரவு மது அருந்தியதும், அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் அருண்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்த தெரியவந்தது.

இது தொடர்பாக மேலும் சிலரை போலீஸ் தேடி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here