Home அரசியல் மோடிக்கு எதிராக 111 பேர் போட்டி; வாரணாசியை அதிரவைக்கப்போகும் தமிழக விவசாயிகள்

மோடிக்கு எதிராக 111 பேர் போட்டி; வாரணாசியை அதிரவைக்கப்போகும் தமிழக விவசாயிகள்

472
0
மோடிக்கு எதிராக

மோடிக்கு எதிராக 111 பேர் போட்டி; வாரணாசியை அதிரவைக்கப்போகும் தமிழக விவசாயிகள்

பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு நலத்திட்டங்களும் இல்லை எனவும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் இந்தியா முழுவதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.

மோடிக்கு எதிராக தமிழக விவசாயிகள் டெல்லியில் சிறுநீர் குடித்தும், அம்மணமாகவும் போராட்டம் நடத்தினர்.

மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில விவசாயிகளையும் ஒன்று திரட்டி பேரணியாக போராட்டத்தை நடத்தினர்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி அன்று வாரணாசி சென்று வேட்புமனு தாக்கல் செய்ய, அங்கு உள்ளவர்களிடம் பிச்சை எடுப்போம் என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here