Home Latest News Tamil Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா?

Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா?

871
3
Corona Virus - கரோனா வைரஸ் - ஆபத்தானதா? கரோண வைரஸ் - உயிர்கொல்லி

Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா? கரோண வைரஸ் – உயிர்கொல்லி கிருமி. ஒளிவட்ட வைரஸ்

கரோண வைரஸ் அடிப்படையில்  அபாயமானவை அல்ல, சில குறிப்பிட்ட வகை வைரஸ் மட்டுமே அபாயமானது ஆகும்.

MERS-Cov : MIDDLE EAST RESPIRATORY SYNDROME CORONA VIRUS

முதன் முதலில் மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் (MERS-Cov-MIDDLE EAST RESPIRATORY SYNDROME CORONA VIRUS) என்ற மர்ம காய்ச்சலால் சுமார் 858 பேர் மரணமடைந்தனர்.

அது குறித்த ஆய்வுகளில் முதல் கரோனா வைரஸ் கடந்த 2012-ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டது.

2019 நவம்பர் மாத நிலவரப்படி மெர்ஸ் நோயால் சவூதி அரேபியாவில் தான் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை 712/858 என்பது குறிப்பிடத்தக்கது .

அதனைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளிலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலும் மேலும் ஐரோப்பாவிலும் கண்டறியப்பட்டது.

இருப்பினும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் அமெரிக்கர் ஒருவருக்கு குறித்த வைரஸ் தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் புளோரிடா மாகாணத்திலும் ஒருவர் கரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தரவுகள் கூறுகின்றன.

இதில் குறிப்பிடத் தகுந்தது என்னவென்றால் வைரஸ் தாக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சமீபத்தில் சவூதி அரேபியா சென்று திரும்பினார்கள் என்பது தான்.

2020 ஜனவரி மாத நிலவரப்படி சீனாவின் கரோண வைரஸ் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் பலர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் .

கடந்த 2015 மே மாதம் கொரியாவில் மெர்ஸ் நோய் தாக்கத்தால் பல நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்தனர்.

SARS-Cov : SEVERE ACUTE RESPIRATORY SYNDROME CORONA VIRUS

2003-ஆம் ஆண்டில் சார்ஸ் (SARS-Cov – SEVERE ACUTE RESPIRATORY SYNDROME CORONA VIRUS) என்ற நோயினால் பாதிக்கப்பட்டு சுமார் 774 பேர் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இருப்பினும் 2015 தரவின் படி உலகில் சார்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை.

உலக சுகாதார அமைப்பு (WHO): 2019-NCOV ( NOVEL CORONO VIRUS)

தமிழில் ஒளிவட்ட வைரஸ் என்றழைக்கப்படும். உலகசுகாதார அமைப்பின் படி சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ள கரோனா வகை வைரஸ் பெயர் 2019 -Ncov-NOVEL CORONO VIRUS என்பதாகும்.

2019 டிசம்பர் மாதம் சீனாவில் கரோனா வைரஸ் தாக்கத்தால் தற்பொழுதுவரை 219 பேர் மரணம் அடைந்துள்ளனர் மற்றும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தால் மூச்சு திணறல், தொண்டை எரிச்சல், வறட்டு இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சிறுவர்களுக்கு இந்தவகை காய்ச்சலால் காதும் பாதிக்கப்படுமாம்.

சுகாதார அவசர நிலை பிரகடனம்

உலகம் முழுவதும் பரவி வரும் காரோண வைரஸ் காரணமாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது . இதனால் உலக நாடுகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது .

வைரஸ் கண்டுபிடிப்பு

கரோனா வகை வைரஸ்கள் முதன்முதலில் 1960-களில் கண்டறிப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைரஸ் எங்கிருந்து உருவானது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.

பரவும் முறைகள்

paravகாரோண வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களிடம் இருந்து இருமல் மூலமாகவும் தொடுதல் மூலமாகவும் பரவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

மேலும் இந்த வகை வைரஸ் காரணமாக ஒரு நபர் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் காய்ச்சலால் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த வைரஸ் எளிதாக பரவி விடும் என்பது ஆய்வில் வெளிவந்த உண்மை. அமெரிக்காவில் காரோண வைரஸ் பாதிப்பு பனி காலங்களில் அதிகம் ஏற்படுகிறது.

பொதுவான அறிகுறிகள்

பொதுவாக இந்த வகை வைரஸ் ஆனது மனிதனின் சுவாச மணடலத்தை பாதிக்கிறது அதன்காரணமாக மூக்கு ,தொண்டை ,இரத்தம் சுழற்சி போன்றவைகளின் மூலம் அடையாளம் காணப்படுகிறது.

குறிப்பாக இந்த வைரஸ் தாக்கம் நுரையீரலில் உணரப்படும் பொழுது வயதான நபர்களுக்கு நிமோனியா போன்ற காய்ச்சல் ஏற்படுமாம். நாளைடைவில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் இதய நோய் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

கொரணா வைரஸ் தடுப்பூசி

இந்த வகை வைரஸ் தாக்குதலுக்கு இதுநாள் வரை கொரணா வைரஸ் தடுப்பூசி கண்டறியப்படவில்லை, மேலும் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கும் வழிமுறைகள் மட்டுமே செயலாக்கப்பட்டு வருகிறது.

தடுப்பு முறைகள்:

1.கையை சோப்புகள் அல்லது ஆல்கஹால் கொண்டு மிதமான வெப்பநிலையில் உள்ள நீரில் கழுவவேண்டும்.

2.கைகள் மற்றும் விரல்களை கண்கள் மற்றும் மூக்கு ,வாய் பகுதிகளுக்கு அருகில் கொண்டு செல்ல கூடாது.

3.நோய் தாக்கிய நபருடன் நெருங்கிய தொடர்பு இருத்தல் கூடாது.

4.முடிந்தவரை தனிமை படுத்தப்படவேண்டும்.

5.நீர்ம உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

6.பாதிக்கப்பட்ட நபரை தனிமை படுத்தப்பட்ட அறையில் வைத்து சிகிச்சை அளிக்க பட வேண்டும்.

7.ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை குழந்தைகளுக்கு மற்றும் வாலிபப் பருவ வயதினருக்கு பரிந்துரைத்தல் கூடாது.

Previous articleஅரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் 10!
Next articleரத சப்தமி: சூரிய வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here