Home Latest News Tamil கொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO

கொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO

281
0
கொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO

கொரோனா முழுவதுமாக எப்போதும் ஒழிக்கப்படாது, WHO நேற்று ‘கொரோனா வைரஸ் முழுவதுமாக ஒழிக்கப்படாது. மக்கள் இந்த வைரசுடனே வாழ தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளது.

ஜெனிவா, சுவிட்ஸர்லாந்து: நாவல் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றன. இந்த ஊரடங்கு தற்போது படிப்படியாக தளர்க்கப்பட்டு வருகிறது.

புதன்கிழமை அன்று உலக சுகாதார மையம் இந்த புதிய வைரஸ் ஒருபோதும் முழுவதுமாக அழிப்பப்படாது. மக்கள் தான் இனி இந்த வைரஸ் உடன் வாழ தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தது.

கொரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவத்துவங்கி இன்று உலகின் பல்வேறு நாடுகளில் அதன் தீவிரத்தை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் இதுவரை 4.3 மில்லியன் மக்கள் கொரோனா பெருந்தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300000-ஐ நெருங்குகிறது.

ஏறத்தாழ பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்துமே முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இதில் சில நாடுகள் மட்டும் இந்த ஊரடங்கில் தளர்வுகளை படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் WHO அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் ஜெனிவாவில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில் முதன்முறையாக இந்த வைரஸ் மனிதர்களிடையே நுழைந்துள்ளது.

எனவே நாம் அதை எப்போது வெல்வோம் என்று தற்போது கணிப்பது சாத்தியமில்லை. இந்த காரோண வைரசும் நம் சமூகசத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.

இந்த வைரஸ் ஒருபோதும் முற்றிலுமாக மறையாது. மாறாக நாம் தான் இதனுடன் வாழ நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரம்பம் முதலே இந்த வைரஸ் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இதனால் உலகின் பல்லவேறு நாடுகள் ஊரடகை வெவ்வேறு வழிகாட்டுதல்களுடன் அமல்படுத்திவருகின்றன. கட்டுப்பாடுகளை தளர்த்தியபின் இரண்டாம் அலை நோய் தோற்று பரவாது என உத்திரவாதம் அளிக்க முடியாது.

என்று அவர் கூறியுள்ளார். WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், பல்வேறு நாடுகள் ஊரடங்கை தளர்த்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன என்று கூறியுள்ளார்.

மேலும், ‘நாங்கள் இந்த தளர்வுகளை தற்போது பரிந்துரைக்கவில்லை. எல்லா நாடுகளிலும் ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கை தளர்த்துவது என்பது பேராபத்தை தரும்.

இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் நீண்ட நெடிய தொலைவு நாம் செல்லவேண்டியுள்ளது. எனவே எங்கள் பரிந்துரை என்பது எல்லா நாடுகளிலும் பாதுங்கப்பு நடவடிக்கைகள் உயர்மட்டத்தில் இருக்க வேண்டும்.

என்று அவர் கூறினார்.

Previous articleஆம்னி பேருந்து கட்டணம் – தமிழ்நாடு ஆம்னி பேருந்து சங்கம் அதிரடி
Next articleபத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ? உயர்நீதிமன்றத்தில் விசாரணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here