Coronavirus Medicine : கொரோனாவினை தடுப்பதற்கான மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ஜெர்மன்நாட்டு விஞ்ஞானிகள் ஊடங்களில் பேசி வருகின்றனர்.
தற்போது உலகில் உள்ள அனைத்து வல்லுனர்களுமே, கொரோனா எனும் நோய்க்கான மருந்துகண்டுபிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கின்றனர். பல நாடுகள் இதில் முன்னேற்றம் கண்டாலும், உறுதியான மருந்தாக இன்னும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை.
பல நாடுகளைப்போலவே தற்போது ஜெர்மனிநாட்டு விஞ்ஞானிகளும் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். அது கொரோனாவினை எளிதாக ஏமாற்றி அதன் தொற்றிலிருந்து மனிதர்களை விடுவித்துவிடும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
ஜெர்மனியின் புதிய மருந்து ( Coronavirus Medicine )
கொரோனாவைரஸ் மனித உடல்களில் இருக்கும் செல்களின் சுவாசப்பாதையான ACE2 எனும் துவாரம் வழியாகவே உடலினுள் நுழைகிறது. நுழைந்தபின் அது நேரடியாக நுரையீரலில் இருக்கும் செல்களினை பாதித்து தொற்றினை ஏற்படுத்துகிறது.
தற்போது ஜெர்மானியர்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தானது, செல்களில் இருக்கும் ACE2வினை பலப்படுத்துவதோடு மட்டுமல்லலால், கொரோனா போன்ற வைரஸ்களிடமிருந்து விலகிருக்கவும் செய்யுமாம்.
கொரோனா வைரஸை தன்பக்கம் ஈர்க்கும் புரதமான டீகாய் எனும் புரத்தினை மனித உடலில் செலுத்துவதன் மூலம், ACE2வினை தாக்கவரும் கொரோனவைரஸ் டீகாய் புரதத்தோடு சேர்ந்துவிடும்.
அது மட்டுமல்லாமல் இந்த டீகாய் புரதம், கொரோனாவின் அறிகுறிகள் ஏற்படும் முன்பே அந்த கிருமிகளை அழித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
உலகில் பல விஞ்ஞானிகள் இந்த முறை மிகவும் ஆபத்தானது என்பதால் முயற்சிக்கும்முன் நிராகரித்துவிட்டனர். இந்த மருந்தினால் கொரோனா பாதிப்படைந்தவருக்கு வேறு ஏதாவது பெரிய பிரச்சனைகள் ஏற்படலாம் என்று பலர் கூறுகின்றனர்.
இருப்பினும் இந்த மருந்து மக்களை கொரோனாவிடமிருந்து காக்கும் என்று நம்பிக்கையுடன் ஜெர்மன் விஞ்ஞானிகள் அந்த நாட்டு ஊடகங்களில் கூறியுள்ளனர்.



