கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா நேற்று காலமானார் இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சீனாவில் உருவானதாக சொல்லப்படும் இந்த கொரோனா வைரஸ் அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உலுக்கி வருகிறது.
இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டு அரசாங்கங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் இந்த வைரஸால்.
நேற்று இரவு இந்திய பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி, மக்களிடம் சுய ஊரடங்கு மற்றும் சமூக விலகலை பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார். 21 நாட்கள் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
பொருளாதாரத்தை விட எனக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் முக்கியம் என்று மக்கள் அனைவரும் சுய ஊரங்கிற்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இந்தியாவில் சிறப்பாக செயல் பட்டு கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சீனாவில் மிஞ்சியது இத்தாலியில் இறப்பு எண்ணிக்கை சீனாவில் மிஞ்சியது.
ஸ்பெயின் நாட்டிலும் 5690 பேர் இறந்துள்ளனர் நேற்று ஒரு நாள் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டின் அரச குடும்பத்தின் இளவரசியான 86 வயது மரியா தெரஸா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
தற்போது நேற்று கொரோனா வைரஸ் அதிகரித்து நேற்று அவர் காலமானார்.
முதல்முறையாக ஸ்பெயின் நாட்டில் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது