Home விளையாட்டு ஆகாஷ் சோப்ரா; எம்‌எஸ் தோனியின் எதிர்காலம் ஐ‌பி‌எல் தொடரை சார்ந்து இல்லை

ஆகாஷ் சோப்ரா; எம்‌எஸ் தோனியின் எதிர்காலம் ஐ‌பி‌எல் தொடரை சார்ந்து இல்லை

241
0
எம்‌எஸ் தோனி

எம்‌எஸ் தோனியின் எதிர்காலம் ஐ‌பி‌எல் தொடரை சார்ந்து இல்லை, முன்னாள் இந்திய வீரரும் கமண்டேடருமான ஆகாஷ் சோப்ரா தோனி எதிர்காலம் பற்றி கூறியுள்ளார்.

கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு எந்த வித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காத இந்தியாவின் மூத்த வீரர் தோனி ஓய்வு பற்றியும் எந்த வித தகவலும் கூறாமல் இருந்தார்.

இதனிடையே ஐ‌பி‌எல் தொடருக்காக ஒரு மாதத்திற்கு முன்பே சி‌எஸ்‌கே அணிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த கேப்டன் தோனி, கொரொனா பரவலின் காரணமாக ஊருக்கே சென்று விட்டார்.

கொரோனா இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் ஐ‌பி‌எல் தொடர் கைவிடும் நிலையில் இருக்கிறது. டி20 உலகக்கோப்பையும் நடக்குமா என தெரியவில்லை.

தோனியின் எதிர்காலம் குறித்து சக வீரர்கள் அவ்வப்போது அவர்களின் கருத்தை கூறி வருகின்றனர். இந்தியா முன்னாள் ஆகாஷ் சோப்ரா தோனியின் எதிர்காலம் பற்றி அனைவரும் தவறாக புரிந்து வைத்துள்ளனர்.

அவர் இந்தியா அணிக்கு திரும்புவதற்கும் ஐ‌பி‌எல் போட்டியில் சிறப்பாக செயல்படுவதற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.

அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பலாம் என நினைத்தால் அவரை தேர்வுக்குழு உடனே எடுத்துக்கொள்ள தயாராக உள்ளது. அவர் கையில் தான் அவர் எதிர்காலம் உள்ளது என கூறியுள்ளார்.

Previous articleமே மதத்தில் மீண்டும் கார் உற்பத்தி துவக்கப்படும்
Next articleஇர்ஃபான் கான் மரணம்; பத்ம ஸ்ரீ, தேசிய விருதுகள் வென்ற மகா நடிகர்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here