Home சினிமா கோலிவுட் பிருத்விராஜின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் மனைவியின் உருக்கமான பதிவு!

பிருத்விராஜின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் மனைவியின் உருக்கமான பதிவு!

354
0
Supriya Menon Instagram

Prithviraj Wife Supriya Menon; பாலைவனத்தில் சிக்கி தவிக்கும் பிருத்விராஜின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் மனைவியின் உருக்கமான பதிவு! ஜோர்டான் நாட்டிற்கு படப்பிடிப்பிற்கு சென்ற நடிகர் பிருத்விராஜ் ஊரடங்கு உத்தரவு காரணமாக சிக்கித்தவிக்கும் சூழலில் அவரது மனைவி உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நடிகர் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் Supriya Menon இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உலகமே கொரோனா பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு என்னவோ அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருக்கிறது.

எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான பிருத்விராஜ் ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டு பாலைவனத்தில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், ஆடுஜீவிதம் படக்குழுவினர் தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இது குறித்து பிருத்விராஜ் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதோடு, உணவும் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருவதாக குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவு ரசிகர்களை கலங்க வைத்தது.

இந்த நிலையில், பிருத்விராஜின் மனைவி சுப்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மிகவும் கடினமான இந்த சூழலில் மரணமும் கொடிய நோயும் பரவி வரும் வேளையில், இந்த இரட்டை வானவில் எனது கணவர் வருவதற்கான அறிகுறியா? என்று வருத்தத்துடன் கேட்டு பதிவிட்டுள்ளார்.

SOURCER SIVAKUMAR
Previous articleசென்னையில் பிறந்த ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜூன் பர்த்டே டுடே!
Next articleஇப்போ தான் புரியுது ஏன் நாட்டாமை மேல டீச்சருக்கு லவ் வந்துச்சுன்னு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here