பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு சீக்கிரமே கல்யாணமாம். வீட்ல எனக்கு மாப்பிள்ளை பாக்கறாங்க என அவர் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சித்ரா.
தொடர்ந்து சில தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்த இவர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி 2 தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதற்குப்பின்னர் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இவரது முல்லை கதாபாத்திரம் தான் இவருக்கு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்தது.
இவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் ‘திருமணம் எப்போது’ என கேட்டதற்கு “வீட்ல மாப்ள பாக்கறாங்க. இன்னும் ரெண்டு வருஷமாகும்” என அவர் தெரிவித்திருந்தார்.
யாரையாச்சும் லவ் பன்றிங்களா என்று கேட்டதற்கு இந்த மூஞ்சிக்கெல்லாம்யார் கெடைப்பா என்று கேட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நெஸ்ட் எபிசொட் எப்போ வரும்னு நானும் காத்துகிட்டு இருக்கேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.