அடுத்த பிரதமர்? பிரச்சனை முடியவில்லை..! இனிமேல் தான் ஆரம்பம்.
ஐந்து மாநில தேர்தலில் பாஜக சரிவு. பண மதிப்பிழப்பு, பொருளாதார வீழ்ச்சி, அதிகார துஸ்பிரயோகம் இப்படி காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.
எவ்வளவு தான் மத அரசியல் செய்தாலும், மதங்களையும் மீறிய நடுநிலை மக்கள் அதிகம் உள்ளதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
மோடியின் கோட்டை சரிவை நோக்கிச்செல்கிறது. அதே நேரத்தில் அடுத்த பிரதமர் யார்? என எதிர்பார்ப்புகள் எழத்துவங்கி விட்டது.
சில கட்சித்தலைவர்கள் அடுத்த துணைப்பிரதமர் என கானாக்கோட்டை கட்ட ஆரம்பித்துவிட்டனர். நடக்குமா?
இந்த தேர்தல் வெற்றியின் மூலம், அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என இப்பொழுதே முழக்கங்கள் எழத்துவங்கி விட்டன. ராகுல்காந்தி சரியானவரா?
ராகுல்காந்தி பிரதமர் பதவிக்கு சரியானவரா? என்பதைவிட, அடுத்த கட்டத் தலைவர்கள் இல்லை என்பதே உண்மை.
இத்தனை வருட இந்திய அரசியலில் பாஜக, காங்கிரஸ் தவிர தேசிய அளவில் வேறு எந்தக்கட்சியும் எழுச்சி பெறவில்லை.
அப்படியே எழுச்சி பெற நினைத்தாலும், குட்டிக்கட்சிகளே அதற்கு முட்டுக்கட்டையிடுகின்றனர்.
ஒரு கட்சியை ஆட்சியில் அமர்த்திவிட்டு, அந்தக் கட்சியை விரட்ட வேண்டும் என மீண்டும் ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைப்போம்.
பிறகு, அந்தக் கட்சியை விரட்டவேண்டும் என மீண்டும் தூக்கியெறிந்த பழைய கட்சியின் கையில் ஆட்சியை ஒப்படைப்போம். வாழையடி வாழையாய் தொடரும் வழக்கம்.
பாஜக தோல்வி என்பதைவிட, அடுத்து வரப்போவது யார்? என்பதில் தான் இந்தியாவின் தலையெழுத்து அடங்கியுள்ளது.
புதிய கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்கலாம் எனும் புரட்சி வெடிக்க இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.. அதுவரை, இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் கதை தான்.