Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தகவல்கள்

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு தகவல்கள்

2627
0
இந்தியாவில் கொரோனா,

இந்தியாவில் கொரோனா ஊரடங்கு : மாராட்டியத்தில் புதிதாக 552 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு.  டெல்லியில் புதிதாக மூன்று கொரோனா கட்டுப்பாடு மண்டலங்கள்(Containment Zones).

இந்தியாவில் புதிதாக 1,329 கொரோனா பாதிப்புகள் இன்று மட்டும் உறுதி செய்யப்பட்டன, மேலும் 44 பேர் இந்த நோயால் இன்று இறந்துள்ளனர் என “சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்” தெரிவித்தது.

இந்தியாவில் கொரோனா

மேலும் இந்தியாவில் இதுவரை 18,985 பேர் இந்த நோயால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதில் 15,122 பேர் பாதிக்கப்பட்டும் 3,259 பேர் குணமடைந்து வீடு திரும்பியும், ஒருவர் இடம்பெயர்ந்தும் மற்றும் 603 பேர் இறந்தும் உள்ளனர்.

டெல்லியில் மட்டும் 2,081 பேர் பாதிக்கப்பட்டும் 47 பேர் இறந்தும் உள்ளனர். முதல் இடத்தில் உள்ள மராட்டிய மாநிலம் இந்த நோயால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது இங்கு கொரோனா பாதிப்பு 4,666 ஆகவும் 250க்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர்.

குஜராத்தில் 1,939 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 71 பேர் இறந்துள்ளனர் இது மூன்றாம் இடத்தில் உள்ள மாநிலமாகும்.

கோவிட் இந்தியா சேவா(COVID India Seva) செயலி

இதற்கிடையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ‘கோவிட் இந்தியா சேவா’(COVID India Seva), எனும் மக்களுக்கும் சுகாதாரத்துறைக்கும் இடையே கருத்து பரிமாற்ற செயலியை திறந்து வைத்தார்.

இதில் மக்கள் கொரோனா சம்மந்தமான கேள்விகளை கேட்டு பயண்பெரும் வகையிலும், “பயிற்சி பெற்ற வல்லுநர்கள் இதில் சுகாதாரத் தகவல்களை மக்களுக்கு வழங்குவார்கள் எனவும், மக்களுடனான நேரடி தொடர்பில் இருக்க இந்த செயலி பயண்படும் “ எனவும் தெரிவித்தார்.

இந்தியா தற்போது கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here