Home நிகழ்வுகள் இந்தியா கொரோனா பாதிப்பால் இறந்த முதல் இறப்பு, 85 வயது முதியவர் காலமானார்: கோவா

கொரோனா பாதிப்பால் இறந்த முதல் இறப்பு, 85 வயது முதியவர் காலமானார்: கோவா

கொரோனா பாதிப்பால் இறந்த

கோவா: 85 வயது முதியவர் கொரோனா பாதிப்பினால் திங்கள் கிழமை இறந்தார். இது அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த முதல் இறப்பு என சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்தார்.

சட்டாரி தாலுக்காவில் உள்ள மோர்லெம் கிராமத்தை சேர்ந்தவர்

இறந்தவர் வடக்கு கோவாவின் சட்டாரி தாலுக்காவில் உள்ள மோர்லெம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என ரானே தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் கொரோனாவால் இறந்த முதல் இறப்பு

“கோவாவின் சட்டாரி தாலுக்காவில் உள்ள மோர்லெம் கிராமத்தை சேர்ந்த 85 வயது முதியவர் கொரோனாவால் இறந்தார் என்பதை மிக்க சோகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்து கொள்கிறேன். இது இந்த மாநிலத்தில் கொரோனாவால் இறந்த முதல் இறப்பாகும்,” என ரானே ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை வரை கோவா மாநிலத்தில் 818 கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 683 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous articleபூரி ஜகன்நாத் கோயில் இரத யாத்திரை நிகழ்ச்சி கொரோனாவினால் கட்டுபாடுகளுடன் இன்று நடக்கவிருக்கிறது
Next articleஇன்னும் 30 நாள்: டுவிட்டரில் சிங்கம் சூர்யா டிரெண்டிங்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here