கேரள தம்பதியினர் வீடியோ காலில் திருமணம் செய்துள்ளனர். வாட்ஸாப் செயலியில் உள்ள காணொளி காட்சி மூலம் மணமகன் தாலி கட்டிய நூதன நிகழ்வு கேரளாவில் நடந்தேறியுள்ளது.
திருவனந்தபுரம்: கொரோனாவின் தாக்கம் உலகையே உலுக்கி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதனால் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
இதன் காரணமாக மக்கள் அதிகம் கூடும் விழாக்களும், நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. திருமணங்கள் மிக எளிமையான முறையில் குறைந்த நபர்கள் கொண்டு நடந்து வருகின்றன.
கேரளாவில், வினோதமான திருமணம் ஒன்று நடந்தேறியுள்ளது. கோட்டயாவின் சங்கநசேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித் நடேசன் (30), மணமகள் பி அஞ்சனா அஸ்ஸரி (28) ஹரிபாட் அருகே பல்லிபாட்டை சேர்ந்தவர்.
ஆலப்புழா மாவட்டம், ஹரிபாட் அருகே உள்ள பாலிபாட் நகரைச் சேர்ந்தவர் அஞ்சனா. ஆனால் தற்போது அஞ்சனா உத்தரபிரதேசத்தின் லக்னோவில் வசிக்கிறார்.
ஸ்ரீஜித் ESAF ஸ்மால் ஃபைனான்சில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அஞ்சனா உ.பி.யில் எச்.சி.எல் டெக்னாலஜிஸில் ஆய்வாளர் ஆக பணியாற்றி வருகின்றார்.
இந்த ஜோடி கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டது. ஆரம்பத்தில் ஜனவரி மாதம் திட்டமிடப்பட்ட திருமணம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இரு வீட்டாரும் திருமண தேதியை மேலும் ஒத்திவைக்க எண்ணிய நிலையில், ஆன்லைனில் திருமணம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஏப்ரல் 26-ம் தேதி கேரளாவில் மணமகனின் பெற்றோர் மணமகளின் வீட்டிற்குச் சென்று, காணொளி காட்சி மூலம் மணமகன் திருமணத்தின் அடையாளமாக தாலி காட்டினார்.
மணமகள் தன் இருப்பிடத்திலேயே தங்க தாலியை அணிந்து கொண்டார். இருவரும் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே ஊரடங்கு தளர்த்தப்படும் வரை இருப்பது என முடிவு செய்துள்ளனர்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, இருவருக்கும் திருமண அழைப்பு நடத்துவதாக இவர்களின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.