மும்பை: அரபிக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மராட்டியம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை நோக்கி ஜூன் 3 வாக்கில் நகர வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் “இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து மராட்டியம் மற்றும் குஜராத் மாநிலங்களின் கடற்கரைகளை ஜூன் 3 வாக்கில் அடைய வாய்ப்புள்ளது, “ என தெரிவித்தது.
“இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலை ஒட்டிய பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் நிலை கொள்ள வாய்புகள் உள்ளதாக,” மேலும் தெரிவிக்கப்பட்டது.