புதுடெல்லி: சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை நிறுத்தம், விமான போக்குவரத்து துறை அறிவிப்பு. சரக்கு விமானங்கள் சில நாடுகளுக்கு அடுத்த மாதம் இயக்கப்படலாம் என தெரிகிறது.
சர்வதேச பயணிகள் விமானங்கள் தடை ஜூலை 15 வரை தொடரும்
அந்த அறிவிப்பில்: “திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவற்றுக்கு ஜூலை 15 வரை தடை தொடரும். இருப்பினும் விமான போக்குவரத்தின் இயக்குனரால் அனுமதி பெற்ற சர்வதேச சரக்கு விமானங்கள் சில பாதைகளில் அனுமதிக்கப்படலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்களின் சேவை மார்ச் 22 முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வந்தே மாதரம் திட்டத்தின் படி மீட்கப்பட்டுவரும் இந்தியர்கள்
இருப்பினும் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான திட்டம் வந்தே மாதரத்தின்(VBM) படி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டம் மே 6 முதல் செயல் பாட்டில் உள்ளது.