புதுடெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இது அந்த மாநிலத்தின் 4 மாத நீண்ட மழை பொழிவு காலமாக கருதப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கட்கிழமை தெரிவித்தது.
தென்மேற்கு பருவமழை
“கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது,” என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருத்யுஞ்செய் மொகாபத்ரா தெரிவித்தார்.
இந்த பருமவழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களை கொண்டது. நாட்டின் 75 சதவிகித மழை பொழிவு இந்த காலகட்டத்தில் நிகழும் என தெரிவிக்கப்படுகிறது.
தனியார் அமைப்பும் அறிவித்தது
‘ஸ்கைமெட் வெதர்’ எனும் தனியார் அமைப்பும் தென்மேற்கு பருவமலை குறித்து மே 30ஆம் தேதி அறிவித்திருந்தது.