Home நிகழ்வுகள் இந்தியா மும்பை: மருத்துவமனை ஊழியர் மின்தூக்கியில் பிணமாக கண்டெடுப்பு

மும்பை: மருத்துவமனை ஊழியர் மின்தூக்கியில் பிணமாக கண்டெடுப்பு

வேலை பார்த்த 45வயது பெண்

மும்பை: தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜியார்ஜ் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் வேலை பார்த்த 45வயது பெண்மணி மின்தூக்கியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

கொரோனா நோயாளிகள் பிரிவில் வேலை செய்தவர்

இறந்தவர் கொரொனா நோயாளிகள் பிரிவில் நான்காம் நிலை ஊழியராக வேலை செய்பவர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதன் கிழமை மதியம்

புதன் கிழமை மதியம் ஒருவர் மருத்துவமனையின் மின்தூக்கியின் கதவை திறந்த பொழுது இந்த பெண்மணி இறந்த நிலையில் அங்கு கிடந்தார் என தெரிகிறது.

இந்த பெண்மணி இறந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் இறந்ததாக வழக்கு

மாடா ராமாபாய் அம்பேத்கார் மார்க் காவல் நிலையத்தில் விபத்தில் இறந்ததற்கான வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதுவரை மும்பையில் 32,791 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,065 பேர் இறந்துள்ளனர்.

 

Previous articleபுதன் கிழமை தமிழகத்தில் 6 பேர் கொரோனாவால் இறப்பு, இதுவரை 18,545 பேர் பாதிப்பு
Next article28/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here