Home நிகழ்வுகள் இந்தியா ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

405
0
ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு

ஒரே நாளில் 28,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28,000-ஆக பதிவானதால் மொத்த பாதிப்பு 8.49-லட்சமாக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,637 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 551 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,49,553 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2,92,258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 5,34,621 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 22,674 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 28,637 பேருக்கு புதியதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here