சென்னை: சனிக்கிழமை தமிழ்நாட்டில் 1989 புதிய கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 42,687 ஆக உள்ளது மற்றும் தமிழ்நாட்டின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 397.
ஜுன் 8 வரை சென்னையில் 236 பேர் கொரோனாவால் இறந்தனர்
ஜுன் 8 வரை சென்னையில் மட்டும் 236 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர் என தெரிகிறது. மேலும் 7 பேரின் இறப்பு சனிக்கிழமை கூடுதலாக சேர்கப்பட்டது.
கிட்னி நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவது அதிகரிப்பு
“ கிட்னி பாதிப்படைந்த கொரோனா நோயாளிகள் பல பேர் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு திருப்பி விடப்படுகின்றனர்.3 டியாலஸிஸ் இயந்திரங்கள் தற்போது உள்ளன மேலும் 10 விரைவில் வாங்கப்படும்,” என ஸ்டான்லி மருத்துவ கல்லூரியின் தலைவர்(டீன்) தெரிவித்தார்.
சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 30,444
சனிக்கிழமை தமிழகத்தின் கொரோனா பாதிப்பாளர்களில் 1,487 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் மொத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 30,444 ஆக உள்ளது.
சென்னையின் அருகாமையில் உள்ள திருவள்ளூரில் 78 கொரோனா தொற்றுகளும், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் சேர்த்து 170 தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் 50 புதிய கொரோனா தொற்றுகளும், தூத்துக்குடி மற்றும் மதுரையில் 30 மற்றும் 15 புதிய தொற்றுகளும் சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.