Home நிகழ்வுகள் தமிழகம் வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்தது

வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்தது

வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை

சென்னை: வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 1,438 தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் வெள்ளிகிழமை 12 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக உள்ளது.

ஆறு நாட்களாக 1000த்திற்கு மேல் கொரோனா தொற்று

கடந்த ஆறு நாட்களாக 1000த்திற்கு மேல் மாநிலத்தின் கொரோனா தொற்று  தொடர்ந்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 14,968 பேர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.

1,438 புதிய தொற்றுகளில், சென்னையில் மட்டும் 1,116 தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. செங்கல்பட்டில் 86 தொற்றுகள், திருவள்ளூரில் 64 தொற்றுகள் , காஞ்சிபுரத்தில் 15 புதிய தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மீதி 124 தொற்றுகளில் ராணிபேட்டையில் 14 தொற்றுகள், திருவண்ணாமலையில் 13 தொற்றுகள், திருச்சியில் 12 தொற்றுகள் மற்றும் மற்ற மாவட்டங்களில் 21 தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று

மேலும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் இருந்து திரும்பிய 14 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து திரும்பிய 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிட்னி பாதிப்படைந்த 44 வயதுடையவர் கொரோனாவால் இறந்தார். 50களில் வயதுடைய 3 பேரும், 70 களில் வயதுடைய 3 பேரும் மற்றும் 80களில் இருந்த 4 பேரும் கொரோனாவால் இறந்தனர்.

Previous articleஅர்ஜூன், ஹர்பஜனுக்கு நடுவில் லோஸ்லியா: ஃப்ரண்ட்ஷிப் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
Next articleஎதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here