Home நிகழ்வுகள் தமிழகம் நிர்மலா தேவி: அதிரவைக்கும் உண்மைகளை நீதிபதியிடம் கூற உள்ளார்

நிர்மலா தேவி: அதிரவைக்கும் உண்மைகளை நீதிபதியிடம் கூற உள்ளார்

406
0
நிர்மலா தேவி

நிர்மலா தேவி: அதிரவைக்கும் உண்மைகளை நீதிபதியிடம் கூற உள்ளார்

கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட  நிர்மலா தேவி நீண்ட நாட்களாக ஜாமீன் கிடைமால் அலைந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சிறையில் மகளிர் தினம் கொண்டாடியதாகவும், கும்மி போட்டியில் பரிசு வென்றதாகவும் மீடியாக்களிடம் சிறை நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் அது சுத்தப்பொய் என நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் நிர்மலா தேவி நீதிபதியை சந்தித்து உண்மைகளைக் கூற முற்படும்போது போலீசார் அருகிலேயே நின்றுகொள்கின்றனர்.

இதனால் நாளை உண்மைகளைத் தைரியமாகக் கூற வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தி உள்ளார். தனிமையில் அவரிடம் விசாரிக்க உள்ளார்.

நாளைய விசாரணையின்போது நிர்மலாதேவி பல திடுக்கிடும் தகவலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here