Home நிகழ்வுகள் தமிழகம் இளம் விவசாயியை வீட்டில் சென்று பார்த்த டிஎஸ்‌பி நடந்து என்ன?

இளம் விவசாயியை வீட்டில் சென்று பார்த்த டிஎஸ்‌பி நடந்து என்ன?

266
0

இளம் விவசாயியை வீட்டில் சென்று பார்த்த எஸ்‌பி நடந்து என்ன? 50கிலோ அரிசி, 25கிலோ காய்கறிகள் மற்றும் அப்துல் கலாம் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

திருவள்ளூர் அகரம்கண்டிகை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், தமது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சென்னை கோயம்பேடு சந்தைக்கு பைக்கில் எடுத்து சென்றுள்ளார்.

அவரை வழிமறைத்த போலீசார்கள் 2 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் டி‌எஸ்‌பி வாகனம் முன்பு காய்கறிகளை கொட்டி போராட்டம் செய்தார்.

அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவலர்கள், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த செய்தி ஊடகங்களில் பரவியதால் உடனே கார்த்திக்கை நேரில் சென்று பார்த்தார் டி‌எஸ்‌பி.

விவசாயி கார்த்திக்குக்கு 50 கிலோ அரிசி, 25 கிலோ காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். அப்துல் கலாம் புத்தகம் ஒன்றையும் எஸ்பி அரவிந்தன் வழங்கினார். அவரின் பைக்கும் திருப்பி அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here