Home நிகழ்வுகள் தமிழகம் திருப்பூர் காவல்துறை கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேரை கைது செய்தது

திருப்பூர் காவல்துறை கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேரை கைது செய்தது

கஞ்சா கடத்திய வழக்கில்

கோவை: செவ்வாய் கிழமை திருப்பூர் காவல்துறை கஞ்சா கடத்திய வழக்கில் 4 பேரை கைது செய்தது மற்றும் 15கிலோ கஞ்சாவை பரிமுதல் செய்தது. மேலும் ஒரு நான்கு சக்கர வாகனத்தையும் கைப்பற்றியது.

கைது செய்யப்பட்டவர்கள் இராமனாதபுரத்தை சேர்ந்த கே. சரவனண், 40, ஒட்டஞ்சத்திரத்தை சேர்ந்த வி. செல்லதுறை, 34, திருப்பூரில் உள்ள திருமுகன்பூண்டியில் வசிக்கும் சாமுண்டிபுரத்தை சார்ந்த எம். ஹரிஷ் மற்றும் திருப்பூரில் உள்ள காந்திநகரில் வசிக்கும் ஆர். ரகு, 30 என தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திராவிலிருந்து அவினாசி வழியாக கடத்தல்

கைதுசெய்யப்பட்டவர்கள் ஆந்திராவிலிருந்து அவினாசி வழியாக கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர் என்பதும் ஒட்டஞ்சத்திரம் மற்றும் இராமனாதபுரம் ஆகிய இடங்களில் விற்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

கடத்தியவர்கள் கஞ்சா மற்றும் போதைமருந்து தடுப்பு Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act, 1985 சட்டத்தின்படி கைது செய்யப்பட்டார்கள் என காவல்துறை தெரிவித்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here