இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் எம்எஸ் தோனி இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினமானது என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு பின்பு தோனி கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார்.
பிசிசிஐ அணி தேர்வில் தோனியை அடுத்த போட்டிகளில் கழட்டி விட்டது. வருடாந்திர ஊதியப்பட்டியல் டோனியை இந்திய நிர்வாகம் நீக்கியது.
தற்போது தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி நாட்களுக்கு நெருங்கி விட்டார். இவர் அணியில் இடம்பெறுவது மிகவும் கடினமான ஒன்றுதான்.
ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 28ஆம் தேதி ஆரம்பமாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.
இதனால் உலகெங்கும் எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட்டும் விதிவிலக்கல்ல.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்று அறிவித்தார்.
ஆனால் தற்போதுள்ள நிலைமை மிகவும் மோசமடைந்ததுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் வைரஸ் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மற்ற வீரர்களை இந்திய நாட்டுக்கு அழைத்து மிகவும் கடினமான ஒன்று. விமான சேவையும் கிடையாது.
இதனால் ஐபிஎல்யை மறந்து விடுங்கள் என்று தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார் சவுரவ் கங்குலி.
இதனால் தோனியின் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடுமோ என்றும் தோன்றுகிறது.
கௌதம் கம்பீர் இருக்கும், எம்எஸ் தோனி க்கும் சில காலங்களாகவே ஆகாத ஒன்றாக இருந்து வருகிறது.
கவுதம் கம்பீர் தோனியை எப்போதும் குறை சொல்லிக்கொண்டு வருகிறார். தற்போது அதுபோல இன்று தோனி குறித்து அவர் கூறியதாவது :
இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை என்றால் தோனி இந்திய அணிக்கு திரும்புவதில் மிகவும் கடினமானதாகிவிடும்.
கடந்த ஒன்றரை வருடமாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கும் எம்எஸ் தோனி, எதன் அடிப்படையில் தேர்வு செய்வார்கள்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கேஎல் ராகுல், தோனி அளவிற்கு கீப்பிங் செய்யவில்லை தான்.
ஆனால் டீ20 என்று வரும் போது ராகுலை கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபிஎல் போட்டி இல்லை என்றால் தோனிக்கு வாய்ப்புகள் குறைவுதான்.
இறுதியாக இந்திய அணிக்கு தேர்வு செய்யும் போது யாராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுக்க முடியும் என்றால் மட்டுமே இந்தியாவுக்காக விளையாட வேண்டும்.
“அவரின் ஓய்வு என்பது அவரின் தனிப்பட்ட விஷயம்” என்று கூறியிருந்தார்.
கௌதம் கம்பீர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிடும்போதும் தோனியை பற்றி குறிப்பிடாமல் பதிவிட மாட்டார். ஏனென்றால் தோனியை பற்றி பேசவில்லை என்று அவருக்கு தூக்கம் வராது போல.