Home நிகழ்வுகள் இந்தியா ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை மாற்றினார்

ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை மாற்றினார்

816
0

கொரோனா வைரஸ் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ட்விட்டரில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பெயரை மாற்றி உள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100 நாடுகளுக்கு மேல் பரவி பல லட்சம் மக்களை பாதித்து, பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது..

இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் பல முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் வைரஸ் கட்டுப்படுவதாகவே தெரியவில்லை இந்த நான்கு வாரத்தில் அதிகரிப்பதாகவே உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்திய பிரதமர் மோடி பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறார். மக்கள் அனைவரும் வீட்டில் உள்ளேயே இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

300க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 144 தடையும் பிறப்பித்துள்ளார்.

முக்கியமாக தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து வருகிறது. நம் சுகாதாரத்துறை மிகவும் நன்றாகவே செயல்பட்டு வருகிறது.

இந்த வைரஸின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறது தமிழ்நாடு அரசு.

கொரோனா வைரஸிலிருந்து மக்கள் பாதுகாக்க கிரிக்கெட் வீரர்கள் பலர் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது புதுவிதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் டிவிட்டரில் தன் பெயரை மாற்றி விழிப்புணர்வு செய்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் “லெட்ஸ் ஸ்டே இன்டோர்” என்ற பெயரை மாற்றியுள்ளார்.

அவர் ஏற்கனவே கொரோனா பற்றி தமிழக மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் கூறியிருந்தார்.

தற்போது மக்களின் விழிப்புணர்வுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் “லெட்ஸ் ஸ்டே இன்டோர்” என்று மாற்றியுள்ளார்.

Previous articleCorona Virus: முதல்வரை சந்தித்து பேசிய யோகி பாபு!
Next articleஒலிம்பிக்கை ஒத்திவைத்த கொரோனா – புதிய அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here