Home Latest News Tamil பெண்கள் தினத்திற்காக சமயல் அறைக்குள் நுழைந்த சச்சின்

பெண்கள் தினத்திற்காக சமயல் அறைக்குள் நுழைந்த சச்சின்

361
0

பெண்கள் தினத்திற்காக சமயல் அறைக்குள் நுழைந்த சச்சின்

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாட சமயல் அறைக்குள் நுழைந்து சமைக்க ஆரம்பித்து விட்டார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

நம் வாழ்நாளில் நேரம் காலம் பார்க்காமல் நமக்குச் சமைத்துக் கொடுத்த நம் அம்மாவிற்கு நாம் ஒரு முறையாவது சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் நான் ‘பைங்கண் பார்த்தா’ டிஷை சமைக்கப்போகிறேன். சமைத்த பிறகு இந்த உணவை என் அம்மா, அஞ்சலி மற்றும் சாரா ஆகிய மூவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

நான் செய்து முடித்ததும் முதலில் என் அம்மா ருசி பார்த்த பிறகே மனைவியும் மகளும் பார்ப்பார்கள் என்றும் கூறினார்.

இதற்கிடையில் காய்கறி நறுக்கும் பொழுது கையில் வெட்டுப்பட்டது போன்ற வேடிக்கையாக நடிக்கவும் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ போட்டுள்ளார்.

இறுதியில் அம்மா சச்சின் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து பாராட்டிய பிறகு சச்சின் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

45 வயதான சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் ஆவார். கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர் பட்டியலில் சச்சின் தான் முதலிடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here