Home Blog Page 53

டாக்டர்களைப் போன்று கவசங்களை அணிந்து கொண்ட பறந்த நடிகை!

0
Rakul Preet Singh

Rakul Preet Singh; டாக்டர்களைப் போன்று கவசங்களை அணிந்து கொண்ட பறந்த நடிகை! நடிகை ரகுல் ப்ரீத் சிங் மருத்துவர்களைப் போன்று பாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பறந்து சென்றுள்ளார்.

டாக்டர்களைப் போன்று சுயபாதுகாப்பு கவசங்களை அணிந்து கொண்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் விமானத்தில் பறந்து சென்றுள்ளார்.

கொரோனா பாதிப்பு நாடு முழவதும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக என்ன செய்வது என்று அனைவருமே கதி கலங்கி நிற்கிறார்கள்.

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பராமரித்தல், கை சுத்தம் பராமரித்தல் என்று சுத்தம் சுகாதாரத்தோடு வாழ்வதற்கு அனைவருமே பழகி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மட்டும் ஒருபடி மேலேயே போய்விட்டார். ஆம், கொரோனா வைரஸ் தொற்றுதலை தவிர்ப்பதற்காகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று பணியாற்றவும் கற்றுக்கொண்டுள்ள மருத்துவர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் அணிந்து கொள்ளும் பிபிஇ எனப்படும் சுய பாதுகாப்பு கவசங்களை (முக கவசம், கையுறைகள், ஷூ கவர்) அணிந்து கொண்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் விமானத்தில் சிட்டாக பறந்து சென்றுள்ளார்.

அதோடும் மிஷன் டெல்லி என்று ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஹாய் தோழர்களே நாம் இப்படியெல்லாம் பயணிக்க வேண்டியிருக்கும் என்று யாரேனும் நினைத்துப் பார்த்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு வீடியோவில், முக கவசம் அணிந்து கொண்டு நான் விண்வெளிக்கு செல்வதைப் போன்று உணர்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்தை ரகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பதாவது: ஜான் ஆபிரகாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து நான் நடித்து வரும் அட்டாக் படத்திற்காக அனைவரும் பணியாற்றி வருகிறோம். உண்மையில், நாங்கள் அனைவருமே தனிமனித இடைவெளியை கடைபிடித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

3

என்னது எனக்கு கல்யாணமா? ஷாக்கான ஹன்சிகா மோத்வானி!

0
Hansika Motwani Wedding

Hansika Motwani; என்னது எனக்கு கல்யாணமா? ஷாக்கான ஹன்சிகா மோத்வானி! தனக்கு விரைல் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவல் அறிந்து நடிகை ஹன்சிகா மோத்வானி அதிர்ச்சியடைந்துள்ளார்.

நடிகை ஹன்சிகா மோத்வானிக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக  திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சாமி 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, புலி, அரண்மனை 2, மனிதன், போகன், குலேபகாவலி, துப்பாக்கி முனை, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஹன்சிகாவின் 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில், சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

மஹா படத்தைத் தொடர்ந்து பார்ட்னர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா மோத்வானி, தனது கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதோடு ஒல்லியாகவும் மாறியுள்ளார்.

இந்த நிலையில், ஹன்சிகாவிற்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று டுவிட்டரில் செய்தி வெளியானது. இதைக் கண்ட ஹன்சிகா மோத்வானி அடக்கடவுளே…! அவர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஒருவர் ஏன் என்கிட்ட சொல்லலனு கேட்டதற்கு எனக்கே இப்போ தான் தெரியும் என்று பதிலளித்துள்ளார்.

29 வயதாகும் ஹன்சிகா மோத்வானி எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Hansika Marriage Rumour

3

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களுக்கு தளபதி விஜய் அன்பு வேண்டுகோள்!

0
Thalapathy Vijay Birthday

Thalapathy Vijay Birthday; பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: ரசிகர்களை ஏமாற்றிய தளபதி விஜய்! நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று விஜய், அறிவுறுத்தியதாக மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

ஜூன் 22 பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று விஜய் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய். தொடர்ந்து குடும்பக் கதையை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கூட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இது முற்றிலும் கல்லூரையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் கல்லூரி ஆசிரியராக நடித்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். எப்படா தளபதி பிறந்தநாள் வரும், கொண்டாடலாம் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

விஜய் பிறந்தநாளுக்கு அன்னதானம் செய்வது, கோயில்களில் பூஜை செய்வது, நலத்திட்ட உதவிகள், ரத்த தானம் வழங்குவது, மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது என்று ரசிகர்கள் கொண்டாடுவது உண்டு.

ஆனால், இந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுமா என்று கேள்வி இருந்தது.

இந்த நிலையில், விஜய் பிறந்தநாள் தொடர்பாக, தளபதி விஜய் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதன்படி, கொரோனா தாக்கம் அதிகமாகி வரும் நிலையில், பொதுமக்கள், ரசிகர்கள் நலன் கருதி ஜூன் 22 அண்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்த கொண்டாட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் செய்தித்தாள் வாழ்த்து விளம்பரங்கள் என்று எந்த செயல்களிலும் ஈடுபடாமல்,

பாதுகாப்பாக சமூக விலகலை கடைபிடித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும்படி மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி என் ஆனந்த் மூலமாக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய் அறிவுறுத்தியுள்ளார். தளபதி வழி செல்வோம்! பின்பற்றுவோம்!! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை கொண்டாட இருந்த ரசிகர்களுக்கு இந்த அறிக்கை ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படம் வெளிவரவில்லை என்று ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது மற்றுமொரு ஏமாற்றமும் ரசிகர்களுக்கு கிடைத்தது. எனினும், மக்களின் நலன் கருதி ரசிகர்களும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Vijay Birthday Announcement

3

தளபதி பர்த்டே ஸ்பெஷல்: மாஸ்டர் டிரைலர் வெளியீடு?

0
Master Trailer Release Date

தளபதி பர்த்டே ஸ்பெஷல்: மாஸ்டர் டிரைலர் வெளியீடு? வரும் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், பிறந்தநாள் பரிசு கொடுக்கும் வகையில், மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் டிரைலர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தளபதி விஜய். தொடர்ந்து குடும்பக் கதையை மையப்படுத்திய படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் இவரது படங்களில் குழந்தைகளை கவரும் காட்சிகளும், அரசியல் கட்சிகளை விமர்சிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும். அரசியல் தொடர்பான காட்சிகள் இருப்பதாலோ என்னவோ படம் சர்ச்சைக்குப் பிறகே வெளியாகிறது.

ஆனால், மாஸ்டர் படத்தில் கொஞ்சம் விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை, படப்பிடிப்பு தளபத்தில் பாஜகவினர் போராட்டம் என்று பல பிரச்சனைகளை கடந்து வந்தது.

சரி, பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படம் அறிவித்தபடி கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று பார்த்தால் அதுக்குள்ளாக கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கியது.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. மேலும், லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டது. தற்போது, 5ஆவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

இந்த நிலையில், வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு விஜய்க்கு பரிசு கொடுக்கும் வகையிலும், ரசிகர்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கும் வகையிலும், மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் பிறந்தநாளுக்கு இன்னும் 11 நாட்கள் உள்ள நிலையில், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கூறுகையில், மாஸ்டர் டிரைலரை 6 முறை பார்த்ததாகவும், மரண மாஸாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஆகையால், இந்தப் பிறந்தநாள் மாஸ்டர் டிரைலர் பிறந்தநாளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

கொரோனா பாதிப்பு: ராணா திருமணம் தள்ளி வைப்பு?

0
Rana Daggubati Wedding Postponed

Rana Daggubati Wedding Postponed; கொரோனா பாதிப்பு: ராணா திருமணம் தள்ளி வைப்பு? ஹைதராபாத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ராணாவின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தல அஜித் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ராணா டகுபதி. அதன் பிறகு பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்தினார்.

இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தற்போது மடை திறந்து, காடன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனது காதலி யார் என்பது பற்றியும், அவரது புகைப்படத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா பஜாஜ் தான் தனது காதலி என்று அவரை அறிமுகம் செய்துள்ளார்.

மிஹீகா பஜாஜ் ஹைதராபாத்தில் டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிகழ்ச்சி மேலாண்மை (Event Management), ஆடை வடிவமைப்பு, பர்ஸ், ஹேண்ட்பேக் வடிவமைப்பு உள்ளிட்ட பணிகளை தனது டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மேலும் மேற்கொண்டு வருகிறார்.

அதோடு மாடலாகவும் இருந்து வருகிறார். சில விளம்பரங்களிலும், அட்டைப் படங்களிலும் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் அல்லது அதற்கு முன்னதாக ராணாவின் திருமணத்தை நடத்த அவரது தந்தை சுரேஷ் பாபு திட்டமிட்டிருந்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், திருமண தேதியை தள்ளி வைக்க இருவீட்டாரும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

ராணா திருமணத்திற்காக திட்டமிட்டுள்ள ஹைதராபாத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் மட்டும் இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் எப்படியோ அதே போன்று ஹைதராபாத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திருமணத்திற்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரது நலன் கருதி, ராணா வீட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

3

உடுக்கை இயக்குநர் பாலமித்ரன் திடீர் மரணம்!

0
Director Balamithran Died

Director Balamithran Passed Away; உடுக்கை இயக்குநர் பாலமித்ரன் திடீர் மரணம்! படப்பிடிப்பு முடிவதற்கு 5 நாட்கள் உள்ள நிலையில், உடுக்கை இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக் குறைவு மரணமடைந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்தியதிலிருந்து கோலிவுட் சினிமாவில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், லாக்டவுனில் விசு, இர்ஃபான் கான், ரிஷி கபூர், நடிகர் சேது ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட நடிகரும், ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினருமான சிரஞ்சிவி சார்ஜா மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

பாலிவுட் சின்னத்திரை நடிகர்கள் மன்மீத் கெர்வால் பணப்பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 4ஜி பட இயக்குநர் அருண் பிரசாத் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவ்வளவு ஏன் பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய், சுஷாந்த் சிங் ராஜ்புட், வருண் சிங் ஆகியோருக்கு மேனஜராக இருந்த திஷா ஷலியன் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், இது தற்கொலையா? இல்லை விபத்து என்று போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உடுக்கை படத்தை இயக்கி வந்த அறிமுக இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து, சினிமா வட்டாத்தில் சோக சம்பவங்கள் நடந்து வருகிறது. பாலமித்ரன் மரணம் குறித்து நடிகை சஞ்சனா சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

என்னுடைய உடுக்கை பட இயக்குநர் மரணமடைந்த செய்தி கேட்டு நான் அதிர்ந்து போனேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலமித்ரன் பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உடுக்கை படத்தில் சஞ்சனா சிங், மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், விபின், உமர், அங்கீதா, லட்சுமி, வலீனா ஆகியோர் பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெருங்கற்காலத்தை சார்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பெருங்கற்காலத்தை சார்ந்த முதுமக்கள் தாழி

தஞ்சாவூர்: செவ்வாய் கிழமை தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் பெருங்கற்காலத்தை சார்ந்த முதுமக்கள் தாழி ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது.

ஏரியை உழவர்கள் தூர்வாரிய போது

கட்டயங்காடு என்ற இடத்தில் உள்ள அய்யனார் ஏரியை உழவர்கள் தூர்வாரிக்கொண்டிருந்த போது இந்த முதுமக்கள் தாழி தென்பட்டது.

இதை அடுத்து தமிழ் பல்கலைகழகத்தின் தொல்லியல் துறை மற்றும் பட்டுக்கோட்டை தாசில்தார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்செய்தியை அறிந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் எம். கோவிந்தரசு முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு வந்து நடந்தவை குறித்து கேட்டறிந்தார்.

முதுமக்கள் தாழி 2500 வருடங்கள் பழமைவாய்ந்தது

தமிழ் பல்கலை கழகத்தின் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்பொருள் ஆராய்ச்சியின்  துறைத்தலைவர் வி. செல்வகுமார் கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழி 2500 வருடங்கள் பழமைவாய்ந்தது என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மேலும் பல முதுமக்கள் தாழிகள் அந்த ஏரியில் மூழ்கியிருக்கக்கூடும் என தெரிவித்தார்.

சமீபத்தில் இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன

சமீபத்தில் இதுபோன்ற முதுமக்கள் தாழிகள் பேராவுரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்தார்.

இரண்டாம் கட்ட புதைப்பிற்கு பயண்படுத்திய தாழிகள்

“அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இத்தகைய தாழிகளை இறந்தவர்களின் இரண்டாம் கட்ட புதைப்பிற்கு பயண்படுத்தினர். எரியூட்டப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட தங்களது முன்னோர்களின் எலும்புகளை அவர்களின் நினைவாக வைக்க இந்த முதுமக்கள் தாழிகளை பயண்படுத்தினர்”, என செல்வகுமார் தெரிவித்தார்.

3

நிறவெறிக்கு எதிராக பாடல் மூலம் குரல் கொடுத்த கவிஞர் வைரமுத்து!

0
Poet Vairamuthu Song Against Racism

Poet Vairamuthu; நிறவெறிக்கு எதிராக பாடல் மூலம் குரல் கொடுத்த கவிஞர் வைரமுத்து! அமெரிக்காவில் நிறவெறியால் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நிறவெறிக்கு எதிராக கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகர் பகுதியில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு எனப்வர் வெள்ளை இன போலீஸ் இன அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டும் அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நிறவெறிக்கு எதிராக நடந்த இந்த கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய சினிமா பிரபலங்கும் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது கவிஞர் வைரமுத்து, நிறவெறிக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். மேலும், ரமேஷ் தமிழ்மணியே இந்தப் பாடலை பாடவும் செய்துள்ளார்.

தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் இதோ உங்களுக்காக:

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை

என்னால் மூச்சு விட முடியவில்லை

என் காற்றின் கழுத்தில்

யார்?

கால் வைத்து அழுத்துவது?

என் சுவாசக் குழாயில்

யார்?

சுவர் ஒன்றை எழுப்புவது?

காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை

என்னால் மூச்சுவிட முடியவில்லை……

3

தல61 அப்டேட்: மீண்டும் பிரபல இயக்குநருடன் இணையும் அஜித்?

0
Thala 61 Movie Update

Thala 61 Movie Update; தல61 அப்டேட்: மீண்டும் பிரபல இயக்குநருடன் இணையும் அஜித்? தல அஜித் தனது 61 ஆவது படத்திற்காக இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

அஜித் தல61 படத்திற்காக இயக்குநர் விஷ்ணுவர்தனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். இப்படத்தைத் தொடர்ந்து அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், பில்லா, ஆரம்பம், யட்சன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநரோடு மட்டுமல்லாமல், அஞ்சலி, சத்ரியன், இருவர், இசை, யட்சன் ஆகிய படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், ஏற்கனவே அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் மீண்டும் தல அஜித்தை வைத்து அவரது 61 ஆவது படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் தல அஜித்துக்கு விஷ்ணுவர்தன் போனிலேயே கதை கூறினாராம். இந்தக் கதை தல அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

இதன் காரணமாக விஷ்ணுவர்தன் – தல அஜித் ஹாட்ரிக் ஹிட் கொடுக்க இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

தல அஜித் தற்போது வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகே தான் அடுத்த படத்தில் நடிப்பேன் என்று அண்மையில், தயாரிப்பாளர் போனி கபூரிடம் கூறியதாக தகவல் வெளியானது.

ஆதலால் கொரோனா லாக்டவுன் முற்றிலும் சரியான பிறகு வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர், தல61 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

3

ஸ்டெதஸ்கோப் உடன் சிவகார்த்திகேயன்: வைரலாகும் டாக்டர் பட புகைப்படங்கள்!

0
Sivakarthikeyan Doctor Movie Stills

Sivakarthikeyan Doctor Movie Stills; ஸ்டெதஸ்கோப் உடன் சிவகார்த்திகேயன்: வைரலாகும் டாக்டர் பட புகைப்படங்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டாக்டர் படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்களிலேயே புதிய உச்சம் தொட்டவர். கடைசியாக இவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியானது. தற்போது, டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது டாக்டர் படத்தின் புதிய புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில், சிவகார்த்திகேயன் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் உடன் இருக்கும் புகைப்படமும், மெட்ரோ ரயிலில் யோகி பாபு உடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படமும், ஹீரோயின் உடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், யோகி பாபுவும் நடித்து வருகிறார்.

பிகில் மற்றும் ஜடா ஆகிய படங்களில் கால்பந்து வீரராக நடித்த யோகி பாபு இந்தப் படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்து வருகிறார். அவர் கிரிக்கெட் உடையில் கையில் பேட் உடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது, டாக்டர் படத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

இவர், கடந்தாண்டு கன்னடத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நானி நடிப்பில் வந்த கேங் லீடர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது டாக்டர் படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

சேலையில், கியூட்டாக இருக்கும் பிரியங்கா அருள் மோகனின் டாக்டர் பட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3