Home Blog Page 54

மகனுக்காக துடிக்கும் தாய்ப்பாசம்: கீர்த்தி சுரேஷின் பென்குயின் டிரைலர் வெளியீடு!

0
Penguin Trailer Released

Penguin Trailer; மகனுக்காக துடிக்கும் தாய்ப்பாசம்: கீர்த்தி சுரேஷின் பென்குயின் டிரைலர் வெளியீடு! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பென்குயின் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பென்குயின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து, ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுக் கொடுத்தது.

தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் பென்குயின். அறிமுக இயக்குநர், ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Stone Bench Films நிறுவனம் மற்றும் Passion Studios நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தாய்ப்பாசத்தை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக குழந்தைக்கு அம்மாவாக கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அதாவது அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தைப் போன்று பென்குயின் படமும் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

வரும் ஜூன் 19 ஆம் தேதி பென்குயின் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இந்த நிலையில், தற்போது பென்குயின் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

பென்குயின் டிரைலரில், கீர்த்தி சுரேஷ் தனது மகன் அஜய்க்கு சோறு ஊட்டி விடுகிறார். அதன் பிறகு அஜய் காணாமல் போவதும், அவரை போலீசாருடன் இணைந்து தேடுவதும், விறுவிறுப்பாக டிரைலர் நகர்கிறது.

அதன் பிறகு, காட்டுப்பகுதிக்குள் சிறுவனின் சடலம் மீட்கப்படுவது போன்று காட்டப்பட்டுகிறது. அது அஜய் என்று போலீசார் கூறுகின்றனர்.

ஆனால், அஜய்க்கு ஒன்றும் ஆகவில்லை என்று கீர்த்தி சுரேஷ் கூறுவது போன்று டிரைலரில் காட்டப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தனது மகனுக்காக, அடையாளம் தெரியாத மர்ம நபரை தேடும் வேட்டையில் கீர்த்தி சுரேஷ் இறங்குகிறார்.

அதன் பிறகு அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படம். இறுதியில், தனது மகனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது பென்குயின் படத்தின் கதை.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் பென்குயின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழில் நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் நடிகர் மோகன் லாலும், தெலுங்கில் நானியும் பென்குயின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான பென்குயின் டீசரை, த்ரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர், டாப்ஸி ஆகியோர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

சுறாவுடன் நீந்திய கத்ரீனா கைஃப்: வைரலாகும் வீடியோ!

0
Katrina Kaif Swimming With Shark

Katrina Kaif Swimming With Shark; சுறாவுடன் நீந்திய கத்ரீனா கைஃப்: வைரலாகும் வீடியோ! பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சுறாவுக்கு இணையாக நீந்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கத்ரீனா கைஃப் சுறாவுடன் நீந்திய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். முன்னணி நடிகர்களுடன் அவ்வப்போது கிசுகிசுவில் சிக்குவது உண்டு. ஆனால், அதையெலலாம் ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.

தனது முதல் படத்திலேயே அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.

எப்போதும், சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர். தனது ஹாட்டான புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது, சுறாவுடன் நீச்சல் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுறாவை கண்டால் அனைவரும் தெறித்து ஓடும் நிலையில், கத்ரீனா கைஃப் மட்டும் சர்வ சாதாரணமாக சுறாவிற்கு இணையாக நீச்சல் செய்துள்ளார்.

சுறாவிற்கு இணையாக நீச்சம் செய்யும் கத்ரீனா கைஃப்பின் துணிச்சலை பிரபலங்கள் பலரும் பாராட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன

0
தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன

தமிழகத்தில் 1,018 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. தமிழகத்தில் இதுவரை தமிழில் சில ஊர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு உச்சரிப்புகள் இருந்துவந்தன.

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 1,018 ஊர்களின் ஆங்கில பெயர்களையும் தமிழிலேயே உச்சரிக்கும் வண்ணம் மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

2018-2019 ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் போது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், “தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும்.

இதனை செயல்படுத்த 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்” என்று அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக முதலில் 1,018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போலவே ஆங்கிலத்திலும் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உதாரணமாக செங்கல்பட்டு chengalpet என்பதிலிருந்து chengalpattu எனவும், பூவிருந்தவல்லி poonamallee என்பதிலிருந்து poovirundavalli எனவும், ஆரணி arni என்பதிலிருந்து aarani எனவும் மாற்றப்பட்டுள்ளன.

மேலும் சென்னையின் பல பகுதிகளில், திருவள்ளூர், சீர்காழி, கரூர், விழுப்புரம், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை கிருஷ்ணகிரி, திருப்பூர், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

பெயர் உச்சரிப்பு மாற்றப்பட்டுள்ள சில ஊர்களின் பட்டியல் :

1. திண்டுக்கல் – Dindigal – Thindukkal
2. நாகர்கோயில் – Nagercoil – Nagerkovil
3. விழுப்புரம் – Vilupuram – Vizhuppuram
4. மதுரை – Madurai – Mathurai
5. திருவரங்கம் – Srirangam – Thiruvarangam
6. வேலூர் – Vellore – Veeloor
7. கரூர் – Karur – Karoor
8. தண்டையார்பேட்டை – Tondiyarpet – Thandaiyaarpettai
9. வ.உ.சி நகர் – V.O.C Nagar – VA.OO.SI Nagar
10. எழும்பூர் – Egmore – Ezhumboor
11. சிவகங்கை – Sivaganga – Sivagangai
12. தருமபுரி – Dharmapuri – Tharumapuri
13. பூவிருந்தவல்லி – Poonamallee – Poovirunthavalli
14. தாராபுரம் வடக்கு – Dharapuram North – Tharaapuram Vadakku
15. தூத்துக்குடி – Tuticorin – Thooththukkudi
16. திருவைகுண்டம் – Srivaikundam – Thiruvaikundam
17. செங்கல்பட்டு – Chengalpet – Chengalpattu
18. கோயம்புத்தூர் – Coimbatore – Koyampuththoor
19. ஆரணி – Arni – Aarani
20. சீர்காழி – Sirkali – Seerkaazhi
21. திருவில்லிபுத்தூர் – Srivilliputtur – Thiruvillipuththur

 

3

அசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது

0
அசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது

அசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கர்பிணி யானை கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்தே நாடு இன்னும் மீளவில்லை. மீண்டும் ஒரு கொடூரம் அசாமில் நிகழ்ந்துள்ளது.

அசாம்: கேரளாவில் பசிக்காக உணவு தேடிய கர்பிணி யானை ஒன்று அன்னாசிபழத்தில் வெடி வைத்து உணவு உண்ணமுடியாமல் இறந்துபோனது.

இதனை அடுத்து இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜன்துட்டா பகுதியில், வெடிபொருட்களால் நிரப்பப்பட்ட கோதுமை மாவு பந்தை உண்ட மாடு வாய் வெடித்து சிதைந்தது.

அசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது      அசாமில் சிறுத்தை கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது

இந்நிலையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் சிறுத்தை ஒன்று கொடூரமாக கொள்ளப்பட்டுள்ளது. கவுஹாத்தி, காதப்ரி கிராமத்தில் வன விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கம்.

அவ்வாறு ஊருக்குள் வரும் சிறுத்தை ஒன்றை பிடிப்பதற்காக சோய்லாம் போடோ என்பவர் வலையை விரித்துள்ளார். அதில் சிறுத்தை மாட்டிக்கொண்டுள்ளதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.

மக்கள் அதிகம் பேர் கூடிவிட பயந்துபோன சிறுத்தை வலையிலிருந்து வெளியேறி ஊருக்குள்ள ஓடியுள்ளது. அதனை துரத்தி பிடிக்க ஊர் மக்கள் ஓடியுள்ளார்.

அப்போது எதிரே வந்த 7 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியுள்ளது. இதனால் மக்கள் கைகளில் கிடைத்தவற்றை தூக்கி சிறுத்தை மீது வீசியுள்ளனர். இதனால் சிறுத்தை உயிரிழந்துள்ளது.

அதன் பின்னர் சிறுத்தையின் கண்கள், நகங்கள், பற்கள் ஆகியவற்றை பிடுங்கி அதன் உடலை சுமந்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வலுத்துள்ளது.

 

3

ஐஸ்வர்யா ராயின் மேனேஜர் தற்கொலை: அதிர்ச்சியில் பாலிவுட்!

0
Disha Salian Suicide

Disha Salian Suicide; ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேனேஜர் தற்கொலை: அதிர்ச்சியில் பாலிவுட்! பாலிவுட்டில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் முன்பு மேனேஜராக பணியாற்றிய திஷா ஷலியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்வர்யா ராயின் முன்னாள் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஒரு 14 ஆவது மாடியில் திஷா ஷலியன் என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது என்னவோ 28. இவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 14 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து மல்வானி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், மும்பையின் தாதர் பகுதியில் திஷா ஷலியன் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த திங்கள் கிழமை அன்று நண்பர்களுடன் மலாட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு, 14 ஆவது மாடியில் உள்ள நடிகர் ரோஹன் ராயின் வீட்டில் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த இரவு உணவில், 6 நண்கர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, அனைவரும் மது மருந்தியுள்ளனர். திஷா ஷலியனும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஜன்னல் ஓரமாக வந்து நின்றுள்ளார். அப்போது, இரவு 1 மணியளவில் நிலை தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த திஷா ஷலியனை போலீசார் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும், வரும் வழியிலேயே அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, அவரது உடல், கண்டிவாலி பகுதியிலுள்ள சதாப்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இதைத் தொடர்ந்து, திஷா ஷலியனின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் யாரிடம் மீது சந்தேகம் தெரிவிக்கவில்லை. திஷா ஷலியன் அதிகளவில் பிரபலமானவர். அவரது எதிர்காலம் குறித்து தெளிவாக முடிவு எடுக்கக் கூடியவர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, திஷா ஷலியனின் நண்பர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த 14 அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் தான் திஷா ஷலியனுடன் இருந்துள்ளனர்.

இறுதியாக இது விபத்தா இல்லை தற்கொலை என்பது குறித்து போலீசார் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. காரணம், திஷா ஷலியன் மது போதையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், வருண் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திஷா ஷலியனின் புகைப்படத்தை பகிர்ந்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சுஷாந்த் சிங் ராஜ்புட், வருண் சிங் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரிடம் மேனேஜராக பணியாற்றியுள்ளார்.

3

நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான ₹.1,350 கோடி வைரங்கள், முத்துக்களை அமலாக்கத்துறை மீட்டது

முத்துக்களை அமலாக்கத்துறை

புதுடெல்லி: புதன் கிழமை நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியவர்களுக்கு சொந்தமான 2,300 கிலோ கிராம் அளவிற்கு பட்டைத்தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் முத்துக்களை அமலாக்கத்துறை ஹாங்காங்கில் இருந்து மீட்டு கொண்டுவந்தது. இவைகளின் மதிப்பு சுமார் 1,350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு வந்த சரக்குகள்

வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு வந்தடைந்த 108 சரக்குகளில் 32 நிரவ் மோடிக்கும் மீதம் மெகுல் சோக்சிக்கும் சொந்தமானதாக கருதப்படுகிறது.

வங்கியில் பண மோசடி வழக்கு

இரண்டு தொழிலதிபர்களும் அமலாக்கத் துறையினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மும்பை பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 2 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக பண மோசடி தடுப்பு சட்டத்தின்(PMLA) கீழ் தேடப்பட்டு வருகிறார்கள்.

1,350 கோடி விலை மதிப்பு மிக்க வைரங்கள் மற்றும் முத்துக்கள்

மீட்டு கொண்டுவரப்பட்ட பட்டைத்தீட்டப்பட்ட வைரங்கள், முத்துக்கள் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு சுமார் 1,350 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

சட்டபூர்வமான நடவடிக்கை

ஹாங்காங்கில் இருந்து இந்த விலை மதிப்புமிக்க பொருட்களை இந்திய கொண்டுவர அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ்(PMLA) இவை அனைத்தும் பரிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

3

சமையல் முதல் கிளீனிங் வரை: வைரலாகும் அசின் மகள் அரின் வீடியோ!

0
Arin Viral Video

Asin Daughter Arin Viral Video; சமையல் முதல் கிளீனிங் வரை: வைரலாகும் அசின் மகள் அரின் வீடியோ! நடிகை அசின் மகள் அரின் வீட்டில் சமையல் செய்வது, சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசின் மகள் அரின் மினி கிச்சன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அசின். ஜெயம் ரவி நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, வரலாறு, ஆழ்வார், போக்கிரி, வேல், தசாவதாரம், காவலன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜித், விஜய், சூர்யா, ஜெயம் ரவி, கமல் ஹாசன், விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

இதையடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அசின் – ராகுல் ஷர்மா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரின் என்று பெயர் வைத்தனர்.

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகை அசின், தனது மகள் அரின் வீட்டில் செய்யும் வேலைகளை வீடியோவாக எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், வீட்டில் மினி கிச்சன் உருவாக்கி அதில், டம்மியான பாத்திரங்களை வைத்து சமையல் செய்வது விளையாடி வரும் போட்டோ மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

மேலும், தரையை துடைப்பது போன்று இருக்கும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அசின் கூறுகையில், “சீரியசான குவாரண்டைன் குக்கிங் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்: தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம்!

0
Raghava Lawrence Donation

Raghava Lawrence; சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ்: தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம்! ஏற்கனவே அறிவித்தபடி, தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்கில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் செலுத்தியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் தூய்மைRaghava Lawrence has donated rs 25 Lakhs a part from his salary to Frontline workers through 5Star Creationsப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25 லட்சம் செலுத்தி தான் சொன்னதை செய்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சினிமா தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதியுதவி, பொருளுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதலில் ரூ.3 கோடி நிதியுதவி அளித்திருந்தார்.

அதில், பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லடசம், நடனக் கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், ராயபுரம் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.75 லட்சம் என்று வழங்கியுள்ளார்.

தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு உதவும் வகையில், தான் அடுத்து நடிக்கும் படத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், லாரன்ஸின் அறிவுறுத்தலின் படி, தூய்மைப் பணியாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.25,38,750 நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், 3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 Star Creations

3

சின்னத்திரை நடிகை தற்கொலை: தலைமறைவான காதலன் கைது!

0
Santhana Suicide

Actress Santhana Suicide; சின்னத்திரை நடிகை தற்கொலை: தலைமறைவான காதலன் கைது! சின்னத்திரை நடிகை தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்தவர் சின்னத்திரை நடிகை சந்தனா. இவர், குவார்ட்டர் லைப் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

சந்தனா கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னதாக விஷம் குடிப்பதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்தார்.

மேலும், தனது தற்கொலைக்கு காதலன் தினேஷ் தான் காரணம் என்று அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

இது குறித்து பெங்களூர் சுத்தகுண்டா பாளையா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், சந்தனா தற்கொலை செய்து கொண்டது அறிந்து தினேஷ் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார். இந்த நிலையில், இன்று போலீசார் தினேஷை கைது செய்துள்ளனர்.

3