Home Latest News Tamil கொரொனா வைரஸ்: நிலவேம்பு கஷாயம் குடித்தால் வராதா?

கொரொனா வைரஸ்: நிலவேம்பு கஷாயம் குடித்தால் வராதா?

2015
2
green chiretta நிலவேம்பு கஷாயம் Nila vembu

கொரொனா வைரஸ்: நிலவேம்பு கஷாயம் குடித்தால் வராதா? Does Nila vembu (green chiretta) really has the ability to stand against coronovirus? Is it true?

கொரொனா வைரஸ் (கரோனா வைரஸ்) மிகவும் ஒரு அச்சத்தை உண்டாக்கும் நோயாக உருவெடுத்து உள்ளது. இந்த வைரஸ் கிருமி எப்படி மனிதர்களுக்கு பரவியது என்பதே மர்மமாக உள்ளது.

இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. சீனா, ஆறு நாட்களில் புதிய மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

வைரஸ் பாதிக்கபட்ட நகருக்குள் புதிய நபர்கள் உள்ளே செல்லவோ, அங்கு உள்ள நபர்கள் வெளியே செல்லவோ அனுமதிக்கபடவில்லை.

ஒரே நாளில் கொரொனா வைரஸ் இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. 2000 பேர் வரை பாதிக்கப்பட்டதாக தகவல் வந்த நிலையில் அடுத்த நாளே 4000 பேர் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது.

இந்நிலையில் கொரொனா வைரஸ் (coronovirus) பாதிக்கப்பட்டவர்கள் நிலவேம்பு கஷாயம் குடித்தால் சரியாகிவிடும் என தமிழக மீம் கிரியேட்டர்கள், மீம் செய்து வருகின்றனர்.

கொரொனா வைரஸ் கிருமியிடம் இருந்து நிலவேம்பு கஷாயம் பாதுகாக்குமா?

நிலவேம்பு கஷாயம் தயாரித்தல்

நிலவேம்பு (Nila vembu) என்பது ஒரு வகையான மூலிகை செடி. ஆதிகாலம் முதல் இதைத் தமிழர்கள் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

நிலவேம்பு செடியை காயவைத்து; அதன் இலை, வேர் ஆகியவற்றை எடுத்து நன்கு கொதிக்கும் வெந்நீரில் போட்டு; மேலும் நன்கு கொதிக்க விட வேண்டும்.

பிறகு அந்த நீரை ஆரவைத்து வடிகட்டி பருக்கவேண்டும். இது ஒரு எளிய முறைதான். இந்த கஷாயம் மிகவும் கசப்புத் தன்மை கொண்டது.

தற்பொழுது நாட்டுமருந்துக் கடைகளில், ரெடிமேடாக நிலவேம்பு பொடி கிடைக்கிறது. இதை நேரடியாகவே அல்லது சுடுநீரில் கலந்து அப்படியே கூடப் பருகலாம்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் மழைக்காலங்களில் கண்டிப்பாக இந்த நிலவேம்பு குடிநீரை அனைவருக்கும் வழங்குவார்கள்.

கிருமிகளை எதிர்க்கும் வெள்ளையணுக்கள்

நிலவேம்பு கஷாயம் ஏன் அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது? பொதுவாக நிலவேம்பு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எந்த ஒரு கிருமியும் நம் உடலுக்குள் புகுந்துவிட்டால் உடனே வெள்ளையணுக்களுக்கு சமிக்கைகள் கிடைக்கும்.

உடலுக்குள் ஒரு கிருமி வந்துவிட்டது என்றால் அந்தத் தகவல் முதலில் வெள்ளையணுக்களையே சென்றடையும்.

வெள்ளையணுக்கள் அந்த கிருமியை அழிக்கும் ஆண்டிபயாடிக் வைத்து இருந்தால் கிருமியை அழித்துவிடும். புதிய கிருமி என்றால் அதனுடன் கடுமையாகப் போராடி பெருகவிடாமல் தடுக்கும்.

ஒருவேளை கிருமி மிகவும் வீரியம் மிக்கது என்றால், முதலில் உடலில் உள்ள வெள்ளையணுக்களை அழிக்கும். இதன் காரணமாகவே காய்ச்சல் வருமுன்; சளி, மூக்கு வழியாக வெளிவரும்.

இறந்த வெள்ளையணுக்களே சளியாக நம் உடலில் இருந்து வெளியேறுகிறது.

நிலவேம்பு கஷாயம் நன்மைகள்

நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் உடலில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கிறது. ஒரே நாளில் பலமடங்கு வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நிலவேம்புவிற்கு உண்டு.

ஏதேனும் ஒரு கிருமி நம் உடலுக்குள் வந்து வெள்ளையணுக்களை குறைக்க முயன்றால் நிலவேம்பு கஷாயத்தை குடிப்பதன் மூலம் வேகமாக வெள்ளையணுக்கள் உற்பத்தியாகும்.

இதன் காரணமாகவே அரசு மருத்துவமனைகளில் டெங்கு, மலேரியா போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்க நிலவேம்பு குடிநீரை வழங்குகின்றனர்.

கொரொனா வைரஸை நிலவேம்பு கட்டுப்படுத்துமா?

கரோனா வைரஸ் கொரொனா வைரஸ்கொரொனா வைரஸ் மட்டும் அல்ல எந்த ஒரு கிருமி உடலுக்குள் புகுந்தவுடன் முதலில் எதிர்ப்பது வெள்ளையணுக்கள் மட்டுமே. எனவே அதை குறையவிடாமல் பாதுகாப்பது நமது கடமையாகும்.

வெள்ளையணுக்கள் உயிர்ப்புடன் இருந்தால், கொரொனா வைரஸ் போன்ற ஆட்கொல்லிகளை உடலுக்குள் பெருக விடாமல் கட்டுக்குள் வைத்திருக்கும்.

கொரொனா வைரஸ், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை அல்லது நீண்ட நாட்கள் நாம் கொரொனா வைரஸை சமாளித்து உயிர்வாழ நிலவேம்பு குடிநீர் நிச்சயம் பயன்படும்.

மற்றபடி கொரொனா வைரஸை அழிக்கும் சக்தி நிலவேம்பு குடிநீருக்கு கிடையாது. வெள்ளையணுக்கள் வேண்டுமானால் கொரொனா வைரைசை அழிக்க ஏதுவாக தன்னை தகவமைத்துக்கொள்ள வாய்புண்டு.

அதுவரை வெள்ளையணுக்கள் தாக்குப்பிடிக்க நிலவேம்பு (green chiretta) உதவும். எந்த ஒரு நோய் பரவினாலும் உடனே நாம் தினமும் நிலவேம்பு கஷாயம் உட்கொள்ளுவது நல்லது.

Previous articleNZ vs IND 3rd T20: நியூசிலாந்துக்கு ரிவீட் அடித்த இந்தியா
Next articleDoes Nila vembu really has the ability to stand against coronovirus? true?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here