புதுடெல்லி: கொரோனா பரவலை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 40 நாட்களுக்கு பின் இந்திய தலைநகர் டெல்லியில் மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டன இதனால் அங்கு குழப்பமான சூழல் நிலவியது.
கடந்த வாரம் உள்துறை அமைச்சகம் கொரோனா ஊரடங்கை கடந்த வாரம் தளர்த்தியது, அதை தொடர்ந்து இன்று மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன மேலும் மது வாங்கும் போது கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டது.
அப்படி இருந்தும் ஒரு மாதம் கழித்து மது வாங்குவதால் மதுபானக்கடையின் வெளியில் குடி பிரியர்களின் கூட்டம் அலைமோதியதால் குழப்பமான சூழல் நிலவியது.
கிட்டதட்ட 150 மதுக்கடைகள் இன்று தலைநகர் டெல்லியில் திறக்கப்பட்டன. லாஜ்பட் நகர் என்னும் இடத்தில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று மது வாங்கினர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 8 மணிமுதலே மது பிரியர்கள் வரிசையில் நிற்கத்தொடங்கினர். “அதிகப்பேர் முககவசம் அணியாமலும் சமூக விலகலை கடைபிடிக்காமல்ம் நின்றனர்,” என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் நல சங்கத்தினர்(Resident Welfare Associations) அனைத்து மதுபான கடைகளையும் மூடும்படியும் தகுந்த ஏற்பாடுகள் செய்தபின் திறக்கும்படியும் டெல்லி அரசிடம் கேட்டுக்கொண்டனர்.