Home நிகழ்வுகள் இந்தியா பிறந்தநாளன்று காலமானார் அன்பழகன்

பிறந்தநாளன்று காலமானார் அன்பழகன்

322
0
பிறந்தநாளன்று காலமானார் அன்பழகன்

பிறந்தநாளன்று காலமானார் அன்பழகன். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் இன்று காலமானார்.

சென்னை: ஜெ.அன்பழகன், திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமாவார். இவர் கடந்த 2-ஆம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்பின்னர் இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் சிறுநீரக கோளாறு, தீவிர மூச்சு திணறல் காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் 90% ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் 40% ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்தது. மீண்டும் இவருக்கு திங்கட்கிழமை மாலை முதல் உடல்நிலை மோசமடைந்துள்ளது.

சிறுநீரகம் மற்றும் இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மோசமடைந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அன்பழகனின் இறப்பிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Previous articleஎம்ஜிஆரின் ரிக்‌ஷாக்காரன் சாதனையை முறியடித்த தல அஜித்தின் சிட்டிசன்!
Next articleபிரபல மகிழுந்து(கார்) நிறுவனமான மாருதி கொரோனா காரணமாக 97.54 % உற்பத்தியை நிறுத்த முடிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here