Home நிகழ்வுகள் இந்தியா இந்தியாவின் புதிய கொரோனா தொற்று ஒரே நாளில் 22,045 அதிகரிப்பு, தமிழகத்தில் 1...

இந்தியாவின் புதிய கொரோனா தொற்று ஒரே நாளில் 22,045 அதிகரிப்பு, தமிழகத்தில் 1 இலட்சத்தை நெருங்கும் கொரோனா

புதிய கொரோனா

வியாழக்கிழமை இந்தியாவின் புதிய கொரோனா தொற்று ஒரே நாளில் 22,045 எண்ணிக்கை அதிகரிப்பு. முந்தய நாள் புதிய கொரோனா எண்ணிக்கை 20,060 ஆக இருந்தது.

மராட்டியம் முதலிடம், தமிழகம் இரண்டாம் இடம்

மராட்டியம் 6,330 புதிய தொற்றுகளுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு 4,343 புதிய தொற்றுகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் வியாழக்கிழமை 379 பேர் கொரோனாவால் இறப்பு

வியாழக்கிழமை மட்டும் 379 பேர் இந்தியாவில் கொரோனாவால் இறந்தனர். இதை அடுத்து இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,000 த்தை கடந்தது.

தமிழ்நாட்டில் 1,00,000 த்தை நெருங்கும் கொரோனா தொற்று 

டெல்லியில் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 92,000 ஆக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,000 த்தை நெருங்குகிறது.

24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் 57 பேர் கொரோனாவால் இறந்தனர்

தற்போது தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 98,392 ஆக உள்ளது. இதில் 41,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 57 பேர் கொரோனாவால் இறந்தனர்.

இதுவரை தமிழ்நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,321 ஆக உள்ளது.

Previous articleதொடர்ந்து பலி கேட்கும் மின்னல், பீகாரின் வடக்கு பகுதியில் வியாழக்கிழமை 26 பேர் மின்னல் தாக்கி இறந்தனர்
Next article7 வயது குழந்தையை கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக 26 வயது நபர் கைது: புதுக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here