Home விளையாட்டு குட்டி தோனியாக மாறிய பண்ட்; ரசிகர்கள் கப்சிப்

குட்டி தோனியாக மாறிய பண்ட்; ரசிகர்கள் கப்சிப்

329
0
குட்டி தோனியாக tamil news today

குட்டி தோனியாக நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடியதாக பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் ஆரம்பம் முதலே விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார்.

காரணம் அவர் வகிக்கும் விக்கெட் கீப்பர் பதவி. தோனி இருந்த இடத்தில் ரிஷப்பை வைத்து அழகு பார்ப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

அவர் மைதானத்தில் சொதப்பும் போதெல்லாம் தோனி.. தோனி.. என கூச்சலிட்டு அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டு செய்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித், கோலி சீக்கிரமே அவுட் ஆகியிருந்த நிலையில் ரிஷப் பண்ட் வழக்கம்போல் அவுட்டாகி வெளியேறாமல் தோனி போன்று பொறுப்புடன் ஆடினார்.

ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் மெல்ல மெல்ல இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

69 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சென்ற போட்டி வரை ரிஷப்பை கலாய்த்த ரசிகர்கள் நேற்று குட்டி தோனியாக ரிஷப்பை பார்த்ததாக கருத்து தெரிவித்தனர்.

இருப்பினும் அப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. பவுலிங்-பீல்டிங் சொதப்பல்கள் காரணமாக வெட்ஸ்இண்டீஸ் வீரர்கள் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து எளிதாக வெற்றி பெற்றனர்.

Tamil News Today

Previous articleதமிழ் பெண்களே இந்த வீடியோ உங்களுக்குத்தான்
Next articleமாணவர் போராட்டம்: தமிழகத்திலும் வெடித்துள்ளது
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here