Home Blog Page 155

எப்போ வாங்குன டவுசர் இப்போ போட்டு சுத்தும் ஷாலு ஷம்மு!

0
Shalu Shammu PhotoShoot

Shalu Shammu PhotoShoot; எப்போ வாங்குன டவுசர் இப்போ போட்டு சுத்தும் ஷாலு ஷம்மு! வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

நடிகை ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. படத்தில் நடிக்கும் போது ஒல்லியாக அடக்கம் ஒடுக்கமான பெண்ணாக தோற்றமளித்தார்.

தற்போது, அவரது புகைப்படங்களைப் பார்க்கும் போது விமர்சிக்கும் வகையில் இருக்கிறது. அரைகுறை ஆடையுடன், படு கவர்ச்சி உடையில் அவ்வபோது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

போதாதகுறைக்கு கிளாமராக டான்ஸும் ஆடி வருகிறார். அந்த வீடியோவை வேறு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து, சகலகலா வல்லவன், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தனது கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே ஷாலு ஷம்மு நியூஸ் வராத வெப்சைட்டுகளே இல்லை. அந்தளவிற்கு தினந்தோறும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதே வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால், என்ன இதுவரை பட வாய்ப்பு வந்தபாடில்லை.

இந்த நிலையில், அண்மையில், ஷாலு ஷம்மு போட்டோஷூட் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வழக்கம் போல் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Shalu Shammu PhotoShoot

அதில் அதிகப்படியான மேக்கப், கண்ணில் லென்ஸ், டவுசர் மட்டும் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் எப்போது சின்ன வயசுல எடுத்த டவுசரா, இப்போது போட்டுருக்கீங்க என்று விமர்சனம் செய்துள்ளார்.

இப்படியெல்லாம் விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்களுக்கு ஷாலு ஷம்மு கொரோனா குறித்து வீடியோ வெளியிட்டியிருக்கிறார் என்பது தெரியுமா? என்பது தெரியவில்லை.

எனினும், அவர் வெளியிட்டு வீடியோவில் மன உருகி பேசியுள்ளார். அனைவரையுமே வீட்டிலேயே இருக்க சொல்லி அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொடை வள்ளல் அக்‌ஷய் குமார்: முதல ரூ.25 கோடி, இப்போ ரூ.3 கோடி!

0
Akshay Kumar Rs 3 Crore Donation

Akshay Kumar 3 Crore Donation; கொடை வள்ளல் அக்‌ஷய் குமார்: முதல ரூ.25 கோடி, இப்போ ரூ.3 கோடி! பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளித்திருந்த நிலையில், தற்போது மும்பை மாநகராட்சிக்கு ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தற்போது மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் மட்டும் 206 பேர் பலியாகியுள்ளனர். இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

மேலும், கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், பவன் கல்யாண், பிரபாஸ், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, சிரஞ்சீவி என்று மாஸ் நடிகர்கள் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் நமது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி அளித்திருந்தார்.

இந்த நிலையில், மறுபடியும் ரூ.3 கோடியை மும்பை மாநகராட்சிக்கு கொடுத்துள்ளார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், வேகப் பரிசோதனைக் கருவிகள், முகக் கவசங்கள், ஆகியவற்றின் உற்பத்திக்காக மும்பை மாநகராட்சிக்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.3 கோடி நிதி அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் மற்றும் எனனைச் சார்ந்தவர்களின் சார்பாக காவல்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வீட்டுக் காவலர்கள் என்று அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது சங்கீத் சேது SangeetSetu என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து பிரதமர் நிவாரண நிதிக்கு கொடுக்க இருக்கிறார்.

இந்த சங்கீத நிகழ்ச்சி நேற்று முதல் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. SangeetSetu – A Virtual Concert Series நாளையுடன் இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

இப்போதான் ஹீரோவா நடிக்கிறார்: அதுக்குள்ள ஃபெப்சிக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி!

0
Legend Saravana Donation

Legend Saravana Donation; லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் ஃபெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

அருள் சரவணன் Arul Saravanan Donation ஃபெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 206 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள் பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை தானமாகவும் கொடுத்து வருகின்றனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், சூர்யா குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், யோகி பாபு, சூரி என்று பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்.

அந்த வகையில், தற்போது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் ஃபெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பொதுவாக திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சினிமா துறையில் தாங்கள் சம்பாதித்த பணத்தைத் தான் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி வருகின்றனர்.

இன்னும் சில முக்கிய நடிகர், நடிகைகள் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை.

இந்த நிலையில், சமீபத்தில்தான் சினிமாவுக்கு வந்த அருள் சரவணன் தனது முதல் படத்தில் தற்போதுதான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவரே ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், Legend Saravana Stores Owner Arul Saravanan Donation ரூ.25 லட்சம் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளார்.

3

ஒரே நாளில் அடுத்தடுத்து சாதனை: 400 மில்லியன் வியூஸ்களை அள்ளிய மெர்சல்!

0
Mersal Audio Hits 400 Million Views

Mersal Audio 400 Million Views; 400 மில்லியன் வியூஸ்களை அள்ளிய மெர்சல்! தளபதி விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

மெர்சல் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மெர்சல்.

மெர்சல் படத்தில் விஜய், வெற்றி மாறன், மாறன் மற்றும் வெற்றி என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

வெற்றி மாறன் மல்யுத்த வீரனாகவும், மாறன் டாக்டராகவும், வெற்றி மேஜிக்மேனாகவும் நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆதலால், இந்தப் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும், தடையையும் மீறி மெர்சல் திரைக்கு வந்து ரூ.260 கோடிக்கும் அதிகமாகவே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்துள்ளது.

இந்த நிலையில், 3 ஆண்டுகளைக் கடந்து  மெர்சல் ஆல்பம் யூடியூப்பில் 400 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.

Mersal Audio 400M

ஆமாம், படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அப்போ பாடல்களுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு பாடல்களும் யூடியூப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தற்போது மெர்சல் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு சன் டிவியில், விஜய், சிம்ரன் நடிப்பில் வந்த ப்ரியமானவளே படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பிகில் ஆல்பம் யூடியூப்பில் மட்டும் 300 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. சிங்கப்பெண்ணே பாடல் 93.1 மில்லியன் வியூஸ், இதற்குத்தான் பாடலுக்கு 2.28 மில்லியன், காலமே 3.71 மில்லியன் வியூஸ்,

மாதரே 3.75 மில்லியன், வெறித்தனம் 132 மில்லியன், உனக்காக 38.8 மில்லியன், பிகில் பிகில் பிகிலுமா 40.8 மில்லியன், பிகில் 3.15 மில்லியன் வியூஸ் பெற்று தனித்தனியாகவும், ஆல்பமாகவும் சாதனை படைத்துள்ளது.

இப்படி அடுத்தடுத்து விஜய் நடித்த படங்கள் புதிய சாதனை படைத்து வருகிறது. அண்மையில் கில்லி படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு 17.78 டிஆர்பி ரேட்டிங் பெற்றது. விஜய்தான் டிஆர்பி கிங் என்றும் அழைக்கப்பட்டார்.

Bigil Album Hit 300 M Views

3

பச்ச உடம்புக்காரி இப்படி ஆடலாமா? ஆல்யா மானசாவின் டிக் டாக் வீடியோ!

0
Alya Tik Tok Video

Alya Manasa Tik Tok Video; பச்ச உடம்புக்காரி இப்படி ஆடலாமா? ஆல்யா மானசாவின் டிக் டாக் வீடியோ! ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்ய மானசாவின் டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல்யா மானசா பிடித்த பாடலுக்கு டிக் டாக் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி தொடரில் செம்பாவாகா வலம் வந்தவர் சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா.

இந்த தொடரில், இவருக்கு ஜோடியாக கார்த்திக் ரோலில் நடித்தவர் சஞ்சீவ்.

சீரியலைத் தொடர்ந்து நிஜ வாழ்க்கையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அண்மையில், ஆல்யா மான்சா – சஞ்சீவ் கார்த்திக் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைக்கு அயிலா சையத் Aila Syed என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்த நிலையில், புள்ள பெத்த பச்ச உடம்புக்காரி செய்யக்கூடாது காரியத்தை அவர் செய்துள்ளார். ஆம், ஆல்யா மானசா டிக் டாக்கில் செம்மயா ஆட்டம் போடும் வீடியோவை தனது இன்ஸாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், இது எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. இதில், உங்களுக்கு எத்தனை பேருக்கு இந்தப் பாடல் பிடிக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை கண்ட பலரும் குழந்தை பொறந்து கொஞ்சம் நாள் கூட ஆகல அதுக்குள்ள இப்படி ஆட்டம் போடலாமா என்று விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விளம்பர நிகழ்ச்சியில் நடித்த போது எடுத்த மேக்கிங் காட்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

3

இந்திய வீரர் இவரா? ரொம்ப கஷ்டம் – கிளார்க்

0

கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் போல ஒரு டெக்னிக்கல் வீரரை நான் பார்த்ததில்லை என்று மைக்கேல் கிளார்க் புகழாரம் சூட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது மக்களை மட்டும் பாதிக்கவில்லை, விளையாட்டுக்களையும் பாதித்துள்ளது.

இதனால் எந்தவித விளையாட்டுகளும் எந்த நாட்டில் நடைபெறவில்லை. இதனால் விளையாட்டு வீரர்அகள் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள்.

ஆனால் சமூக வலைதளங்களில் சில கிரிக்கெட் வீரர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக கெவின் பீட்டர்சன், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகிறார்கள்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு ஆஸ்திரேலியாவில் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் பேட்டியளித்துள்ளார்.

அவர் தான் எதிர்கொண்ட சிறந்த ஏழு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்து அதற்கான விளக்கமும் அளித்துள்ளார்.

அவர் தேர்வு செய்த முதல் வீரர் பிரையன் லாரா உலகில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக வலம் வந்தவர் தான் பிரைன் லாரா.

இரண்டாவதாக சச்சினை தேர்வு செய்து நான் பார்த்ததிலேயே மிக டெக்னிக்கலாக விளையாடும் வீரர் இவர் தான் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

மூன்றாவது வீரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார.  அனைத்து வடிவங்களிலும் அற்புதமாக விளையாடக்கூடிய வீரர் என்றும் கூறியுள்ளார்.

நான்காவதாக கிரிக்கெட்டின் 360 என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ளார்.

ஐந்தாவதாக காலிஸ், ஆறாவதாக ரிக்கி பாண்டிங், ஏழாவதாக சங்ககரா போன்றவர்களைத் தேர்வு செய்துள்ளார்.

மைக்கேல் கிளார்க் மேலும் சச்சினை தேர்வு செய்தபோது அவர் கூறியதாவது :

“சச்சினுக்கு மிகவும் டெக்னிக்கலாக விளையாடக்கூடிய வீரர். அவர் விளையாடும் போது அவரை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

அவர் தானாக முன்வந்து தவறு செய்தால் மட்டுமே அவரை வீழ்த்த முடியும்” என்று கூறியிருந்தார்.

3

முதலில் மெர்சல் இப்போது பிகில் ஆல்பம்: அடுத்தடுத்து சாதனை படைக்கும் விஜய்!

0
Bigil Album Hits 300 M Views

Vijay Bigil Album; முதலில் மெர்சல் இப்போது பிகில் ஆல்பம்: அடுத்தடுத்து சாதனை படைக்கும் விஜய்! தளபதி விஜய் நடிப்பில் வந்த பிகில் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 300 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

பிகில் படத்தின் ஆல்பம் யூடியூப்பில் 300 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் பிகில்.

பிகில் படத்தில் விஜய் ராயப்பன், மைக்கேல், பிகில் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்று போஸ்டர் வெளியான போது அனைவரும் கூறி வந்தனர்.

ஆனால், படம் வெளியான பிறகுதான் ராயப்பன் மற்றும் மைக்கேல் ராயப்பன் (பிகில்) என்று இரு கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அதுவும், அபபா, மகன் என்ற கதாபாத்திரம்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை ரசிக்கும்படி வைத்துள்ளது.

ஆமாம், படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். அப்போ பாடல்களுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு பாடல்களும் யூடியூப்பில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

பிகில் ஆல்பம் Bigil Album யூடியூப்பில் மட்டும் 300 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது. சிங்கப்பெண்ணே பாடல் 93.1 மில்லியன் வியூஸ், இதற்குத்தான் பாடலுக்கு 2.28 மில்லியன், காலமே 3.71 மில்லியன் வியூஸ்,

மாதரே 3.75 மில்லியன், வெறித்தனம் 132 மில்லியன், உனக்காக 38.8 மில்லியன், பிகில் பிகில் பிகிலுமா 40.8 மில்லியன், பிகில் 3.15 மில்லியன் வியூஸ் பெற்று தனித்தனியாகவும், ஆல்பமாகவும் சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக வந்த மெர்சல் படம் 400 மில்லியன் வியூஸ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி அடுத்தடுத்து விஜய் நடித்த படங்கள் புதிய சாதனை படைத்து வருகிறது. அண்மையில் கில்லி படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு 17.78 டிஆர்பி ரேட்டிங் பெற்றது. விஜய்தான் டிஆர்பி கிங் என்றும் அழைக்கப்பட்டார்.

#Verithanam – 132M
#Singappenney – 93M
#Unakaga – 38.8M
#BigilBigilBigiluma -40.8M
#Maathare – 3.75M
#Idharkuthaan -2.28M
#Kaalame – 3.7M
#JukeBox -3.15M

3

ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் சூர்யா மனிதாபிமானம் மிக்கவர்!

0
Humanitarian Suriya

Humanitarian Suriya; சூர்யா மனிதாபிமானம் மிக்கவர்! ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதில் சூர்யா மனிதாபிமானம் மிக்கவராக திகழ்கிறார்.

சூர்யா மனிதாபிமானம் கொண்டவராக திகழ்கிறார்.

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று திகழ்கிறார்.

யாரேனும் உதவி என்று கேட்டால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர்.

அகரம் ஃபவுண்டேசன் (Agaram Foundation) மூலம் தரமான கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்நிறுவனத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு அகரம் ஃபவுண்டேசன் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டு அகரம் ஃபவுண்டேசன் செயல்பட்டு வருகிறது.

அதோடு மட்டுமல்லாமல், தரமான கல்வி நிறுவனங்களையும் அடையாளம் கண்டு தேவையான வசதிகள், கல்வி தரத்தை உயர்த்த முயற்சிப்பது, கிராமப்புற மக்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்குவது என்று சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

சூர்யா மட்டுமல்லாமல், நடிகர் சிவக்குமார், தனது சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும் மேல்நிலைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகிரார்.

1979 ஆம் ஆண்டு முதல் இந்த சேவையை நடிகர் சிவக்குமார் செய்து வருகிறார். தற்போது அவருடன் இணைந்து அவரது இளைய மகன் நடிகர் கார்த்திக்கும் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகரம் ஃபவுண்டேசன் மூலம் கல்வி உதவி அளிப்பது மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் உதவி செய்து வருகின்றனர்.

கார்த்தி தனது உழவன் அறக்கட்டளை மூலம் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 5 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கியுள்ளார்.

கஜா புயல் பாதிப்பு, கேரளா வெள்ளப்பாதிப்பு ஆகியவற்றிற்கும் நிதியுதவி அளித்துள்ளனர்.

சமீபத்தில், இதுவரை விமானத்தில் செல்லாத 100 குழந்தைகளை சூரரைப் போற்று படத்தின் மூலமாக விமானத்தில் ஏற்றி சென்றிருக்கிறார்.

இப்படி குடும்பத்தோடு சமூக சேவையில் சூர்யா, சிவக்குமார், கார்த்தி ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வளவு ஏன், நாட்டையே உலுக்கிய கொரோனா பாதிப்பால் அன்றாடம் பிழைப்புக்கே வழியில்லாமல் தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சூர்யா மட்டுமல்ல சூர்யாவின் ரசிகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இது போன்ற் ஏராளமான உதவிகளை செய்து வரும் சூர்யா மனிதாபிமானம் கொண்டவர் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இதன் காரணமாக Humanitrian Suriya என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விதவிதமான போஸ்களில் லோஸ்லியா: வைரலாகும் புகைப்படங்கள்!

0
Bigg Boss Losliya Photoshoot

Losliya; விதவிதமான போஸ்களில் லோஸ்லியா: வைரலாகும் புகைப்படங்கள்! பிக் பாஸ் புகழ் லோஸ்லியா விதவிதமான போஸ்களில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோஸ்லியாவின் புகைப்படங்கள் Losliya Snaps என்ற டைட்டிலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலகம் அறியும் ஒரு பிரபலமாக வலம் வந்தார்.

இந்நிகழ்ச்சி அவருக்கு காதலிக்கும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தது. ஆம் இந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்த நடிகர் கவின், லோஸ்லியா இருவரும் காதலித்தனர்.

ஆனால், உண்மையில் அவர்கள் காதலித்தார்களா? என்றால் அது அவர்களுக்கு தான் தெரியும். ஒவ்வொரு நாளும் ஸ்கிரிப்ட்டில் என்ன இருக்கிறதோ அதையே நடிக்க வேண்டும் அது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று பலரும் விமர்சனம் செய்தனர்.

ஆதலால், அவர்கள் பிக் பாஸ் ஸ்கிரிப்ட்டுக்காக காதலித்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அவர்கள் காதலிக்கிறார்களா? என்றால் இதற்கு பதில் இல்லை. எனினும், லோஸ்லியாவிற்கு ரசிகர்கள் லோஸ்லியா ஆர்மி உருவாக்கினர்.

அந்தளவிற்கு தனது நடிப்பு, பாடும் திறமை போன்றவற்றால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவில் அனைவருமே வீட்டில் இருக்கும் நிலையில், லோஸ்லியாவின் அழகான புகைப்படங்கள் Losliya Snaps என்ற டைட்டிலில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, லோஸ்லியா வீட்டிலிருந்தபடியே பாடல் பாடிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை லோஸ்லியா ஆர்மியினர் வைரலாக்கி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லோஸ்லியா ப்ரண்ட்ஷிப் படத்தின் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய் மல்லையாவின் மீதான வழக்கின் விசாரணை ஒத்தி வைப்பு:

0

இந்திய வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக மல்லையா தெரிவித்துள்ளாா்.

தொழிலதிபா் விஜய் மல்லையாவை மோசடியாளராக அறிவிக்கக் கோரி எஸ்பிஐ(SBI) உள்ளிட்ட வங்கிகள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை லண்டன் உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாத கிங்ஃபிஷா்(KingFisher) நிறுவனத்தின் உரிமையாளா் விஜய் மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளாா். அவருக்கு எதிராக, அமலாக்கத் துறை(department of enforcement) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

விஜய் மல்லையாவை வங்கி மோசடியாளராக அறிவிக்கக் கோரி லண்டன் உயா்நீதிமன்றத்தில் எஸ்பிஐ உள்ளிட்ட இந்திய வங்கிகள் சாா்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, அதன் மீதான தீா்ப்பு கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஒத்திவைக்கப்பட்டது.

அந்த வழக்கு மீதான தீா்ப்பை நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ் வியாழக்கிழமை வழங்கினாா். அத்தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளதாக மல்லையா தெரிவித்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக இந்திய உச்சநீதிமன்றத்திலும் கா்நாடக உயா்நீதிமன்றத்திலும் அவா் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த வழக்குகள் வெற்றியடையுமா என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியாது.

ஆனால், அந்த வழக்குகள் நோ்மையான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, அந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும்வரை அவருக்கு காலஅவகாசம் அளிக்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழலில் மல்லையாவுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில் வங்கிகளுக்கு எந்தவிதப் பலனும் இல்லை.

இது தொடா்பான வழக்குகளின் விசாரணை இந்தியாவில் நடைபெற்று வரும்போதே வங்கிகள் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடா்பான வழக்குகளின் விசாரணை நிறைவடையும்வரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைப்பதே சரியாக இருக்கும்.

இந்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்குப் பிறகு நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனா். எனினும், கரோனோ நோய்த்தொற்று காரணமாக வழக்கு விசாரணை நடைபெறும் தேதியை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3