Home Blog Page 290

என் வாழ்நாளில் நான் மிகவும் வருத்தப்பட்ட ஒரே நிகழ்வு இது தான்: தோனி உருக்கம்

0
தோனி உருக்கம்

என் வாழ்நாளில் நான் மிகவும் வருத்தப்பட்ட ஒரே நிகழ்வு இது தான்: தோனி உருக்கம்

என்னுடைய வாழ்நாளில் நான் பட்ட கஷ்டங்களில் மேட்ச் பிக்ஸிங்க் சர்ச்சை தான் மிகவும் கடினமான ஒன்று என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இன்று நான் இருக்கும் இந்த உயரத்திற்கு கிரிக்கெட் தான் முழுக் காரணம். என்னைப் பொறுத்தவரை, கொலையை விட மிகப்பெரிய குற்றம் மேட்ச் பிக்சிங்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பத்திலிருந்து இன்று வரை அதாவது 2008 முதல் 2019 வரை தோனி தான் கேப்டன். தோனி என்றாலே தமிழ்நாட்டில் தனி பெயரும் புகழும் உண்டு.

இடையில் கடந்த 2013-ல் நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுப்பட்ட புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.

2018-ல் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்பியன் பட்டம் வென்றது.

வேறு எந்த கிரிக்கெட் வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் கூட்டம் தோனிக்கு உள்ளது. உலகிலயே மிகவும் வெற்றிகரமான டி20 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தான் முதலிடம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பாட் பிக்சிங் பற்றி ‘ரோர் ஆப் தி லயன்’ ஆவணப்படம் இன்று முதல் இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.

இன்று ஹாட்ஸ்டாரில்  ‘ரோர் ஆப் தி லயன்’ தொடர் ஐந்து எபிசோட்கள் கொண்ட சீஸன் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தனது முழு உணர்வுகளையும் தோனி வெளிப்படுத்தினார்.

3

ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் (Spring Equinox): இன்றைய கூகிள் டூடுல்

0
spring equinox

ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் (Spring Equinox): இன்றைய கூகிள் டூடுல்

சூரியன் பூமியைச் சுற்றி வரும்பொழுது அதன் நிலநடுக்கோடு அல்லது பூமத்திய ரேகையையின் மீது செங்குத்தாக அதன் ஒளி விழும் இதுவே வெர்னல் ஈக்குவினாக்ஸ் ஆகும்.

வெர்னல் ஈக்குவினாக்ஸ் என்பது இரவும் பகலும் சமமான காலஅளவில் இருப்பதை குறிக்கும். அதாவது, பகல் 12 மணி நேரம், இரவும் 12 மணி நேரம் என சமஅளவில் இருக்கும். ஆனால் மிகத்துல்லியமானது அல்ல.

பழங்காலத்தில், மார்ச் மாதத்தில் நிகழும் ‘ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ்’ நாளே புத்தாண்டாக கொண்டாடப்பட்டுள்ளது.

இது வருடத்தில் இருமுறை நடக்கும் மார்ச் மாதத்தில் வருவது ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் என்றும் செப்டெம்பர் மாதத்தில்  வருவது ஃபால் ஈக்குவினாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

மார்ச் மாதம் 20 அல்லது 21 ஆகிய தேதிகளில் ஸ்பிரிங் ஈக்குவினாக்ஸ் வரலாம்.  செப்டெம்பர் 22 ஆம்  தேதிகளில் ஃபால் ஈக்குவினாக்ஸ் வரலாம்.

அதாவது ஒன்று வசந்த காலத்திலும்(மார்ச்) மற்றொன்று இலையுதிர் காலத்திலும்(செப்டெம்பர்) ஏற்படும்.

 

3

ஆப்பிள் ஸ்ட்ரீமிங் சேவையுடன் இணைய மறுத்த நெட்ப்லிக்ஸ் நிறுவனம்

0
netflix vs apple

ஆப்பிள் ஸ்ட்ரீமிங் சேவையுடன் இணைய மறுத்த நெட்ப்லிக்ஸ் நிறுவனம்

தற்போதைய ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவையில் கை ஓங்குகிற நெட்ப்லிக்ஸ் நிறுவனத்தின் சேவையும் ஆப்பிள் நிறுவனத்தின் சேவையும் இணையப் போவதில்லை என நெட்ப்லிக்ஸ் சி‌இ‌ஓ ரீட் ஹஸ்டிங்க்ஸ் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய வாடிக்கையாளர்கள் எங்கள் சேவையை மட்டுமே பயன்படுத்த விரும்புகிறோம். அதே நேரத்தில் எங்கள் சேவை ஒரு போதிலும் ஆப்பிளுடன் இணையாது எனவும் ரீட் கூறியுள்ளார்.

மிகப்பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவைக்கு வருவது எங்களுக்கு மிகவும் போட்டியாக இருக்கும் அதுவே எங்களை மேலும் மேலும் வளர்த்துக் கொள்ள உதவும் என நம்புகிறோம்.

வருகிற மார்ச் 25ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஸ்ட்ரீமிங் சேவையை தொடங்க இருக்கிறது. ஒரு பக்கம் ஆப்பிள் நிறுவனங்களின் ஃபோன் விற்பனை சரியத் தொடங்கியுள்ளது.

அடுத்தடுத்த புதிய சேவை மற்றும் திட்டங்களை கொண்டு வந்தால் மட்டுமே வண்டி ஓட்ட முடியும் என ஆப்பிள் நிறுவனத்திற்கு தெரிந்துள்ளது.

 

3

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் போஸ்டர் வெளியானது : டி காப்ரியோ & பிராட் பிட்

0

ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட் போஸ்டர் வெளியானது : டி காப்ரியோ & பிராட் பிட்

லியோனர்டோ டி காப்ரியோ மற்றும் பிராட் பிட் இணைந்து நடிக்கும் ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட்(Once Upon a Time In Hollywood) திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஹிட் பல்ப் பிக்சன் படத்தை இயக்கிய குயிண்டன் டாரண்டியோ இயக்கத்தில் வெளிவரும் இத்திரைப்படம் நிஜக்கதையை தழுவி எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

1969ஆம் ஆண்டு மண்சோன் குடும்பத்தில் நடந்த கொலையை மையக்கதையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக படக் குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 44 வயதான லியோ மற்றும் 55 வயதான பிராட் இரு கதாப்பாத்திரங்களும் கற்பனையாக அமைத்துள்ளதாகவும் இந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் அஜீத் மற்றும் விஜய் போல மிகவும் பிரபலமான நடிகர்கள் ஆகும்.

டி காப்ரியோ இன்ஸ்டாக்ரம் பக்கத்தில் வெளியான போஸ்டரில் இருவரும் இளமையாக தெரிவதாக ட்விட்டரில் பல விமர்சனங்களும் எழுந்தன.

போஸ்டரில் ஃபோட்டோஷாப் செய்து இருவரையும் இளமையாகவும் ஒல்லியாகவும் காட்டியுள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

https://twitter.com/jordanjabroni/status/1107710645196279809

3

தம்பிக்கு கைகொடுத்த அண்ணன்: முகேஷ் & அனில் அம்பானி

0
mukesh & anil ambani

தம்பிக்கு கைகொடுத்த அண்ணன்: முகேஷ் & அனில் அம்பானி

கடைசி நேரத்தில் உதவுவதற்கு யாரும் இல்லாத நேரத்தில் தானாக முன்வந்து தம்பியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி. இன்றைக்குள் பணத்தை செலுத்தாமல் இருந்திருந்தால் அனில் அம்பானி ஜெயிலுக்கு போக வேண்டியதுதான்.

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டு தொலைத் தொடர்பு நிறுவனமான எரிக்சனுடன் ரிலையன்ஸ் நிறுவனம் 7 வருடம் ஒப்பந்தம் செய்திருந்தது.

எரிக்சன் நிறுவனம் தொலைதொடர்பு கருவிகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டதாகும்.

எரிக்சன் நிறுவனத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் 1500 கோடி கடன் அளிக்க வேண்டி இருந்தது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் 45000 கோடிக்கு மேல் கடனில் தான் சென்றுகொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின்படி, ரூ.550 கோடி பெற்றுக்கொள்ள எரிக்ஸன் நிறுவனம் சம்மதித்தது.

கடந்த ஆண்டு மே மாதம் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ரூ.550 கோடியை வழங்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 120 நாட்கள் கால அவகாசத்தை அளித்தது.

ஆனால் தேதி முடிந்தும் ரிலையன்ஸ் நிறுவனம் பணத்தை செலுத்தாததால் எரிக்சன் நிறுவனம் ரிலையன்ஸ் மீது அவமதிப்பு வழக்குப் போட்டது.

மேலும், 4 வார காலத்திற்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடியை வழங்க வேண்டும் என்றும் இல்லாவிடில், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்தது.
இன்றுடன் கேடு முடிவாதல் சரியான நேரத்தில் அனில் அம்பானியின் அண்ணன் முகேஷ் அம்பானி பணத்தைக் கொடுத்து உதவினார்.
3

அஜித், விஜய், ரஜினி: ஓவர் நைட்டில் ஒபாமாவான இயக்குனர்!

0
அஜித், விஜய், ரஜினி

அஜித், விஜய், ரஜினி: ஓவர் நைட்டில் ஒபாமாவான இயக்குனர்!

தமிழ் சினிமாவின் காலச்சக்கரம் யாருக்கு எப்படி அமையும்? யாரை எப்போது கவிழ்த்தும் என்பதை கணிக்கவே முடியாது.

ஒன்றுக்கும் உதவாதவர்கள் என நினைத்த பலர் முன்னணி நடிகர்களாக உள்ளனர். உச்சத்திற்கு செல்வார்கள் என நினைத்த பலர் இருக்கும் இடம் தெரியாமலும் உள்ளனர்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரு தரமான தமிழ் படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத்.

மூன்றாவது படமே நடிகர் அஜித்தை வைத்து இயக்குகிறார். மூன்றாவது படம் அஜித் என்றாலும் சற்று மனக்கசப்பிலேயே உள்ளார் வினோத்.

அஜித் வற்புறுத்தலின் காரணமாகவே வினோத் ரீமேக் படம் இயக்கவே சம்மதம் தெரிவித்தார். இருவருக்கு இதனால் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது.

நேர்கொண்ட பார்வை படம் முடிந்த கையோடு விஜய், ரஜினியை வைத்து அடுத்தடுத்து இயக்க உள்ளார்.

வினோத்தின் நேரடி கதையில் நடித்திருந்தால் கூட ஒரு நாலு வருடம் குத்தகைக்கு எடுத்தாலும் எடுத்திருப்பார் அஜித்.

அவருடன் ஏற்பட்ட மனகசப்பில் மருந்துபோடும் விதமாக விஜய், ரஜினி என அடுத்ததடுத்து நடித்துக்கொடுக்க தயாராக உள்ளனர்.

ரஜினி நடிக்கும் படத்தில் முதல்முறையாக அவருடைய மருமகன் தனுஷும் நடிக்க உள்ளதாக சில மாதங்கள் முன்பே தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

3

நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு, பலர் படுகாயம்

0

நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரழப்பு, பலர் படுகாயம்

நெதர்லாந்து நாட்டின் யூட்ரெக்ட் நகரத்தில் (டிராம்)ரயிலில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரழந்தார் எனவும் பலர் படுகாயம் அடைந்தனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

மர்ம நபரின் இந்த கொடூரச் செயலால் இதுவும் தீவிரவாதிகளின் எச்சரிக்கை ஆக இருக்கும் என அங்கு இருந்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் ஒரு சிவப்புக் காரில் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனையை கேட்டதும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தன்னுடைய முழுக் கவனத்தையும் இதன் மீது திருப்பியுள்ளார்.

உள்ளூர் நேரப்படி காலை 10:45 மணிக்கு, 24 அக்டோபர்ப்ளேன் ஜங்ஷன் என்ற இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் மூன்று ஹெலிகாப்டர் அந்த  இடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

துருக்கி நாட்டை சேர்ந்த 37 வயது கோக்மென் டானிஸ் என்னும் நபரை போலிஸார் தேடு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யாரும் அவரிடம் நெருங்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

நகரம் முழுவதும், டிராம்(ரயில்) சேவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக யூட்ரெக்ட் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 

3

சல்மான்கான் பாடிய ‘மெயின் தாரே’ பாடல்: நோட்புக் திரைப்படம்

0
சல்மான்கான்

சல்மான்கான் பாடிய ‘மெயின் தாரே’ பாடல்: நோட்புக் திரைப்படம்

நடிகர் சல்மான் கான் ஹேங்க்ஓவர் , மேய்ன் ஹூன் ஹீரோ டேரா ஆகிய பாடல்களுக்கு பிறகு தற்போது ‘நோட்புக்‘ படத்தில் ஒரு காதல் பாட்டு பாடியுள்ளார்.

நோட்புக் திரைப்படம் நேஷனல் விருது பெற்ற இயக்குனர் நிதின் கக்கர் இயக்கத்திலும் சல்மான்கான் தயாரிப்பிலும் வருகிற மே 29ஆம் தேதி வெளிவர உள்ளது.

இன்று சல்மான் கான் பாடிய பாடலை ரிலீஸ் செய்யப் போவதாக படத்தாயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.மேலும் வெளியாகும் பாடலில் சல்மான்கானும் நடித்துள்ளார் என்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நோட்புக் திரைப்படத்தில் நடித்துள்ள ஜோடிகளாகிய ஜாகிர் இக்பால், பிரனுதன் பால் ஆகிய இருவருக்கும் இதுவே முதல் திரைப்படம் ஆகும்.

‘மெயின் தாரே’ பாடல் ஒரு ரொமான்டிக் பாடல் மட்டுமல்ல படத்தின் முக்கியமான தருணத்தில் அதாவது ஹீரோ ஹீரோயின் மீதுள்ள காதலை உணரும் தருணத்தில் வரும் பாடலாகும்.

நோட்புக் 

முன்னாள் ராணுவ வீரர் காஷ்மீர் மாநிலத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் பொழுது அங்கு பணியாற்றிய முன்னாள் ஆசிரியை பயன்படுத்திய நோட் புத்தகத்தை படிக்க தொடங்குகிறார்.

அப்பொழுது அந்த முகம் தெரியாத நபரின் மீது ஏற்படும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் நோட்புக்.

3

சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு அழைக்கக் காரணம் ரஜினிகாந்த்

0
சுசீந்திரன்

சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு அழைக்கக் காரணம் ரஜினிகாந்த்

இயக்குனர் சுசீந்திரன் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.

நல்ல தரமான இயக்குனர் எனத் தனக்கென தனி முத்திரையையும் பதித்துள்ளார். நேற்று திடீரென ஒரு ட்விட் செய்து பரபரப்பை கிளப்பிவிட்டார்.

அவர் ஏன் அவ்வாறு திடீரென் ட்விட் செய்தார் எனப் புரிந்து கொள்ளாமல் அஜித் ரசிகர்கள் அவரை வறுத்தெடுக்கத் துவங்கிவிட்டனர்.

யார் அந்த தலைவா?

மார்ச் 16 2019, 09:03 மணிக்கு சுசீந்திரன் ஒரு ட்விட் ஒன்றைச் செய்தார். அதில் தலைவா வா… வி ஆர் வெய்டிங் என்ற கேப்சனுடன் “வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே தலைவனாக முடியும்” என்ற வாசகத்துடன் உள்ள புகைப்படத்துடன் ட்விட் செய்தார்.

சுசீந்திரன் தலைவா எனக் குறிப்பிட்டதும் ரஜினியைத் தான் தலைவா எனச் சொன்னார் என ரஜினி ரசிகர்கள் அரவக்கோளாறில் ரீட்வீட் செய்தனர். கமெண்டுகள் நிரம்பி வழிந்தன.

கமல் ரசிகர் கேள்வி?


மார்ச் 16-ம் தேதி கமல் ரசிகர் ஒருவர் இதில் நீங்கள் தலைவான்னு குறிப்பிட்டது யாரை எனக் கேள்விகேட்டு 2017-ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியைக் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பேட்டியில் சினிமாத் துறையில் இருந்து அடுத்த முதல்வராக கமல், அஜித் வந்தா நல்ல இருக்கும் எனக் கூறியிருந்தார் சுசீ.

எனவே கமல் ரசிகரின் கேள்விக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் சுசீந்திரன்.

ஏனெனில், அவர் ரஜினியைத் தான் தலைவா எனக் குறிப்பிட்டார் என ஒரு டாக் சென்று கொண்டு இருந்தது.

அடுத்த டிவிட்டில் அண்ணன் அஜித்குமார் ரசிகர்களுக்கு என்று சஸ்பென்ஸ் வைத்து ஒரு ட்விட் செய்கிறார்.

அஜித் அரசியலுக்கு வர வேண்டும்!

அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு ட்விட். அந்த ட்விட் தான் முழுக்க முழுக்க பரபரப்பாக மாறியது.


அதில் சுசீந்திரன் கூறியதாவது, “40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவீதம் சரியான தருணம். வா தலைவா மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்” இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.

அவ்வளவு தான், சில அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் வரவேற்பு அளித்தாலும், எதிர்ப்பு அதிகமாகக் கிளம்பியது.

அரசியல் வேண்டாம் அஜித் போதும், தலைமை வேண்டாம் தல போதும் என்ற ஹேஷ்டாக்குகளை ட்ரெண்ட் செய்யத் துவங்கிவிட்டனர்.

இது ஒருபுறம் இருக்க இன்னொரு புறம் ரஜினி ரசிகர்கள் சுசீந்திரன் மீது கடும்கோபம் அடைந்துவிட்டனர்.

ரஜினியைத் திட்டமிட்டே பழிவாங்க சுசீந்திரன் இப்படிச் செய்துவிட்டார் என ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்தனர்.

சுசீந்திரன் அஜித், கமலை அரசியலுக்கு அழைக்க நினைத்து அது ரஜினிக்கு பல்ப் கொடுக்கும் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

3

மனோகர் பாரிக்கர்: கோவா முதல்வர் காலமானார்

0
மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்: கோவா முதல்வர் காலமானார்

கோவாவின் முதல்வரும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பாரிக்கர் தன்னுடைய 63வது வயதில் இறைவனடி சென்றார்.

கோவாவில் பாஜவைச் சேர்ந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் பல மாதங்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இச்சூழலில் இன்று ஞாயிறு மாலை 6.30 மணிக்கு கோவா முதல்வர் அலுலவகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மருத்துவர்கள் முயன்ற வரை போராடி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார் என அறிவித்துள்ளார்.

ஐஐடி’யில் படித்த முதல் மாநில முதல்வர்

பாரிக்கர் கோவா மாநிலத்தின் மபுசாவில் பிறந்தவர். அவர் மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

1978ல் பம்பாயிலுள்ள ஐஐடி யில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே ஐஐடி’யில் படித்த முதல் மாநில முதல்வர் இவர் தான்.

1994ஆம் ஆண்டு முதல்முறை கோவா சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வானார். அக்டோபர் 24, 2000 முதல் பிப்ரவரி 2, 2005 வரையும், மார்ச் 9, 2012 முதல் நவம்பர் 8, 2014 வரையும் மார்ச் 14, 2017 முதல் இறப்பு வரையும் மூன்று முறை கோவா மாநில முதல்வராக இருந்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நவம்பர் 9, 2014 முதல் மார்ச் 13, 2017 வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக செயல்பட்டார்.

3