Home Latest News Tamil கதிகலங்கும் மல்லையா: குறிவைத்து காத்திருக்கும் பாஜக!

கதிகலங்கும் மல்லையா: குறிவைத்து காத்திருக்கும் பாஜக!

551
0
கதிகலங்கும் மல்லையா

கதிகலங்கும் மல்லையா: குறிவைத்து காத்திருக்கும் பாஜக!

மிஸ்டர் புயல் இணையதளத்தில், ‘விஜய் மல்லைய்யா பாஜகவின் பலி ஆடு‘ என்கின்ற தலைப்பில், கடந்த செப்டம்பர்  மாதம் ஒரு செய்தி வெளியிட்டோம்.

 விஜய் மல்லையாவின் டுவீட், அந்த செய்தியை நூறு சதவீதம் உறுதி செய்துவிட்டது.

“I see the quick media narrative about my extradition decision. That is separate and will take its own legal course. The most important point is public money and I am offering to pay 100% back. I humbly request the Banks and Government to take it. If payback refused, WHY ?

விஜய் மல்லையா பணத்தை திருப்பித்தர தயாராக உள்ளார். இந்தியாவை விட்டு செல்லும் முன்பே இதைத்தான் மீண்டும் மீண்டும் நீதிமன்றத்திலும், பாஜக தலைவர்களிடமும் பலமுறை முறையிட்டுள்ளார்.

மல்லையாவை நாடு கடத்தும் வழக்கில், பிரிட்டன் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. அந்தத் தீர்ப்பை நினைத்து கதிகலங்கியே மல்லையா, டிவிட்டரில் கதறியுள்ளார்.

விஜய் மல்லையா 20000 கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும், பாஜக அதை வாங்க தயாராக இல்லை. பாஜகவின் குறிக்கோள் மல்லையாவை சிறையில் அடைப்பது தான்.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், மல்லையாவை சிறையில் அடைப்பதின் மூலம், பாஜக இழந்த செல்வாக்கை மீட்டுவிடலாம் என பல மாதங்கள் முன்பே திட்டம் தீட்டிவிட்டது.

இதன் காரணமாகவே, மல்லையா கடந்த சில மாதங்கள் முன்பு, சொகுசு வசதிகளுடன் சிறை வேண்டும் என பிரிட்டன் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

அதாவது, இந்தியாவிடம் இருந்து தப்ப முடியாது என முன்பே தெரிந்துகொண்டு விட்டார். நாடாளுமன்ற தேர்தலிற்கு பின்பு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தப்பிவிடலாம் என நினைத்தார்.

பாஜக அரசு, விஜய் மல்லையா என்ற அஸ்திரத்தை வைத்துதான் அரியணையை பிடிக்க முடிவு செய்துள்ளது. எனவே விஜய் மல்லையா, வெகுவிரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விஜய் மல்லையா, பாஜகவின் பலி ஆடு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here