Home நிகழ்வுகள் இந்தியா ஜம்மூ காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மூ காஷ்மீர்: பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொலை

இரண்டு தீவிரவாதிகள்

ஸ்ரீநகர்: ஜம்மூ காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்பு படையினரால் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் உள்ள நிபோரா என்ற பகுதியில்

தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் உள்ள நிபோரா என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்தது. இதை அடுத்து அங்கு பாதுகாப்பு படையினரால் தேடுதல் நடவடிக்கை நடத்தப்பட்டது, என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள்

தேடுதல் நடவடிக்கையின் போது தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.இதனை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், என அந்த அதிகாரி தெரிவித்தார்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டது என மேலும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here