Home நிகழ்வுகள் இந்தியா உத்தரப்பிரதேசம்: 13 வயது பெண் குழந்தை கூட்டு பலாத்காரம்

உத்தரப்பிரதேசம்: 13 வயது பெண் குழந்தை கூட்டு பலாத்காரம்

241
0
13 வயது பெண் குழந்தை கூட்டு பலாத்காரம்

உத்தரப்பிரதேசம்: சீதாபூரில் 13 வயது பெண் குழந்தை இரண்டு இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்புனர்ச்சி மேலும் இந்த செயலை நான்கு நபர்கள் காணொளியில் பதிவு செய்ததாக தெரிகிறது.

இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களையும் காவல்துறை கைது செய்தது.

இச்சம்பவம் புதன் மதியம் 2.00 மணியளவில் மிஸ்ரிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்தது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

“அந்த 13வயது பெண் குழந்தை இயற்கை உபாதையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்ப வருகையில் வலுக்கட்டாயமாக, கைவிடப்பட்ட பள்ளிக்கட்டிடத்திற்கு அந்த ஆறு நபர்களால் தூக்கிச் செல்லப்பட்டாள்,” காவல்துறை கண்கானிப்பாளர் எல் ஆர் குமார் தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவரும் அதே பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் மற்ற நால்வரும் கானொளிக்காட்சியில் இதை பதிவு செய்ததாகவும் அவர் அவர் தெரிவித்தார்.

“இந்த ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் அவர்களை குழந்தை பாலியல் வன்முறைகளை தடுக்கும் பொருட்டு போஸ்கோ(POSCO) சட்டம் மற்றும் மேலும் தகுந்த இந்திய சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார்.

மேலும் அந்த நபர்களால் அவர் யாரிடமும் நடந்தவற்றை தெரிவிக்க கூடாது என கடுமையாக மிரட்டியதாகவும், தற்போது அந்தப் பெண் குழந்தை மருத்துவ பரிசோதனை செய்ய அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

Previous article தோனி மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமே – ஹர்பஜன் சிங் .
Next articleகொரோனா தொற்று அமெரிக்காவில் உச்சகட்டம் 50,000க்கும் மேற்பட்டோர் பலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here