Home அரசியல் டெல்லி தேர்தல்: அடிச்சி தூக்கும் ஆம் ஆத்மி கட்சி

டெல்லி தேர்தல்: அடிச்சி தூக்கும் ஆம் ஆத்மி கட்சி

408
2
டெல்லி தேர்தல்: அடிச்சி தூக்கும் ஆம் ஆத்மி கட்சி

டெல்லி சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக உள்ளது. கெஜ்ரிவால் மீண்டும் பிரதமராக வர வாய்ப்புள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020

தலைநகர் டெல்லியில் வருகின்ற 8 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, பல்வேறு தேர்தல் வியூகங்களுடன் அரசியல் கட்சிகள், சூறாவளி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தேர்தல் வித்தகர் என்றழைக்கப்படும் பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிசோருடன் ஆளும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

அதே போன்று தேசிய கட்சியான பாஜகவும் தன் பங்குக்கு அனைத்து மட்டத்திலும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன.

தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு விட்டன.

வரலாறு காணாத இலவச திட்டங்கள்

மேலும் இந்த முறை வரலாறு காணாத வகையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களுக்கு இலவசங்களைத் தருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அது மட்டுமின்றி அனல் பறக்கும் மதம் மற்றும் அண்மையில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டம் சார்ந்த பிரச்சினைகளும் பிரச்சார கூட்டங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இதனிடையே பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் மற்றும் சந்தை ஆய்வு நிறுவனமான இப்ஸ்கொஸ் ஆகியவை இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் ஆளும் ஆம் ஆத்மீ கட்சி மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதம்

மேலும் வாக்கு சதவீதப்படி சுமார் 52% வாக்குகளை ஆம் ஆத்மியும் 33% வாக்குகளை தேசிய கட்சியான பாஜகவும் பெறுகின்றன என தெரிய வந்துள்ளது.

மேலும் தொகுதி அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 52 முதல் 60 இடங்கள் வரை ஆம் ஆத்மி கட்சி பெறும் எனவும் மற்றும் சுமார் 10 முதல் 14 இடங்கள் வரை பாஜக பெறும் எனவும் முடிவில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் ஆளும் ஆம் ஆத்மீ கட்சி சுமார் 2.8% வாக்குகளை இழக்கிறது எனவும் பாஜக 1.7% வாக்குகளை கூடுதலாகப் பெறும் எனவும் தெரியவந்துள்ளது.

முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும் ஆம் ஆத்மீ கட்சி சுமார் 2.8% வாக்குகளை இழந்து மிக சிறிய பின்னடைவை சந்திக்கும்.

எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை விட கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதே போன்று தேசிய கட்சியான பாஜக இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விடவும் சுமார் 1.7% வாக்குகள் கூடுதலாக பெற்றாலும் வெறும் 10 முதல் 14 இடங்கள் வரை மட்டுமே வெல்ல முடியும் என்பது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இது ஒரு புறம் இருந்தாலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்திற்கு டெல்லி வாழ் மக்கள் சுமார் 71% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த ஆதரவு பாஜகவுக்கு வாக்குகளாக மாறவில்லை என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.

மேலும் முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சுமார் 2.8% வாக்குகளை இழந்து மிகச்சிறிய பின்னடைவை சந்திக்கும்.

எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான 36 இடங்களை விட கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதேபோன்று தேசிய கட்சியான பாஜக இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விடவும் சுமார் 1.7% வாக்குகள் கூடுதலாக பெற்றாலும் வெறும் 10 முதல் 14 இடங்கள் வரை மட்டுமே வெல்ல முடியும் என்பது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற தொகுதிகள்

மேலும் தற்போதை சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடை பெற்றால் மீண்டும் பாஜகவே அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் தெரிய வந்துள்ளது.

இதிலிருந்து சட்டமன்றத்தில் ஆம் ஆத்மீக்கும் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கும் டெல்லி மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பது புலனாவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் தேர்தல் பிரச்சாரம் வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article5-8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு
Next articleYennai arinthal – என்னை அறிந்தால் 5 years Celebration

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here