xiaomi Mi 10 pro வருகின்ற 26 ஆம் தேதி இந்தியாவில் லான்ச் செய்யப்படுகிறது.
இந்த போன் 6.67 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே உடன் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் 1080×2340 பிக்ஸல் ரெசல்யூசன் கொண்டது.
இது 2.84 octacore snapdragon 865 processor கொண்டதால் இது 12 ஜிபி ரேம் உடன் வருகிறது.
அதுமட்டுமல்லாமல் இது 108 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா கொண்டது. அதனுடன் சேர்ந்து 12 மெகாபிக்சல் 8 மெகாபிக்சல் ஆகிய கேமராக்களும் இதில் அடக்கம். செல்ஃபி கேமராவை பொருத்த வரை 20 மெகாபிக்சல் கேமரா வருகிறது.
மேலும் இந்த xiaomi mi10 pro ஸ்மார்ட்போனில் ப்ளூடூத், NFC, யூஎஸ்பி டைப் C, எப்எம் ரேடியோ, 3ஜி, 4ஜி ஆகியவை அடங்கும்.
மேலும் பல எண்ணற்ற ஸ்பெசிஃபிகேஷன் உடன் இது வருவதால் கண்டிப்பாக மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடைய விலை 50 ஆயிரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதைப்பற்றி நன்றாக அறிய கீழே கொடுக்கப்பட்ட யூடியூப் வீடியோவை பார்க்கவும்.
1980 ஆம் ஆண்டு வின்ஸ் மெக்மஹோன் உருவாக்கிய wwe, wrestlemania என்கிற பெயரில் முக்கியமான போட்டிகளை நடத்தி வந்தது.
தற்போது 2020 ஆம் ஆண்டு wrestlemania 36 வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது சீனாவில் உருவான கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. முக்கியமாக அமெரிக்காவும் அதில் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.
Wwe அதிக ரசிகர் பட்டாளம் கொண்டது இந்தியா. இதற்கென்று வெறியர்களே உண்டு 90ல் பிறந்தவர்களுக்கு.
அண்டர்டேக்கர், ஜான் சீனா, ரேண்டி ஆர்டன், கிரிஸ் பெனாயிட், ப்ராக் லெஸ்னர், ரெய் மிஸ்டரியோ,
பிக் சோ, ரோமன்.ரைன்ஸ் போன்ற வீரர்கள் மிகவும் பிரபலமானவர்கள்.
உலகெங்கும் பள்ளிகளில் இவர்களால் மாணவர்கள் அதிக இழப்புகளும் காயங்களையும் சந்தித்தார்கள்.
Wwe இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு THE RAW, SMACKDOWN என்று விளையாடி வருகிறார்கள். புதிதாக wwe NXT என்றற பிரிவில் புதிய வீரர்களும் விளையாடி வருகிறார்கள்.
மாதாமாதம் the raw, smackdown போட்டியில் விளையாடும் வீரர்கள் wwe பெல்ட், வேர்ல்ட் ஹெவிவெயிட் சாம்பியன், டேக் டீம் சாம்பியன் போன்ற பெல்ட்காக டேபிள் லேடர் சேர், நோ மெர்சி, ஆர்மஜடான், பேக்லாஷ், ராயல் ரம்பிள், சம்மர் ஸ்லாம், சர்வவையர் சீரியஸ் போன்ற மேட்சுகள் நடத்தப்படுகிறது.
இதில் மிகப்பெரிய போட்டியாக wrestlemania போட்டி கருதப்படுகிறது.
Wwe வீரர்கள் wrestlemaina-வில் விளையாடுவதை பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.
இதில் விளையாடும் அண்டர்டேக்கர், 33 ரெஸில்மேனியா போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் தான் விளையாடிய 33வது ரெஸில்மேனியாவில் தான் ரோமன் ரைம்ஸ் இடம் தோல்வியடைந்தார். அது அவரது wrestlemania வின் முதல் தோல்வி.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்த ராயல் ரம்பிள் போட்டிகள் ட்ரூ மெகன்டயர், 30 பேர் கொண்ட போட்டியில் வென்று wrestlemania வில் wwe பெல்ட்காக ப்ராக் லெஸ்னரிடம் மோத உள்ளார்.
ப்ராக் லெஸ்னர்-ஐ வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, ஆகையால் இந்த wrestlemania அதிக அளவிற்கு ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் கொரோனா பாதிப்பால் wrestlemaina நடக்குமா என்று ரசிகர்கள் சந்தேகித்தார்.
Wwe வின்ஸ் மெக்மஹான் மகளான wwe முன்னாள் வீராங்கனை தற்போது The RAW உரிமையாளரான ஸ்டெப்னி மெக்மோகன், “ரெஸில்மேனியா திட்டமிட்டபடி இருபிரிவாக பிரிக்கப்பட்டு நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருந்த ரெஸில்மேனியா , கொரோனாவால் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் நடைபெறும்” என்றார்.
1986ஆம் ஆண்டுக்கு பிறகு இரு இடங்களில் ரெஸில்மேனியா நடைபெற இருக்கிறது, இதுவே முதல் முறை.
ரசிகர்கள் wrestlemania வை பார்கக உள்ளே அனுமதி கிடையாது. இதுவும் wwe முதல் முறை நடைபெற உள்ளது.
Wwe சந்தா கட்டி பார்க்கும் pay-per-view வில் மக்கள் இந்த wrestlemania-வை காணலாம் என்று அறிவித்துள்ளார்கள்.
உலகின் ஆறாவது மதிப்புள்ள விளையாட்டு என்று ரெஸில்மேனியா விற்கு போர்ப்ஸ் நிறுவனம் மதிப்பளித்து உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மற்றும் ஒர்லான்டோ ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
ஸ்டெப்னி மெக்மோகன் மேலும் கூறுகையில் “விளையாட்டை விட எங்களுக்கு ரசிகர்களும் மற்றும் எங்களுடைய வீரர்களின் உடல் நலம் மிகவும் முக்கியமானது.
அதனால் வீரர்களை பாதுகாப்பாகவும் ரசிகர் இல்லாமலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று கூறியுள்ளார்
மேலும் சில வாரங்களுக்கு தி ரா மற்றும் ஸ்மாக்டவுன் நடைபெறுமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
தென் ஆப்பிர்க்கா அணி மழையால் ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு, இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த நாள் இன்று.
1992 உலககோப்பை
1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உலக கோப்பையில் நடத்தியது.
1989 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
1909 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா ஐசிசி கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது அன்றிலிருந்து இன்றுவரை ஐசிசி நடத்திய எந்த ஒரு கோப்பையை வென்றது இல்லை.
ஜாம்பவான் தென் ஆப்பிரிக்கா
ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருக்கும் தென்ஆப்பிரிக்க அணியில் ஒரு முறை கூட ஐசிசி நடத்தும் கோப்பையை வெல்ல முடியாதது அந்த அணிக்கு தொடர் சோகமாகவே உள்ளது.
தென்னாபிரிக்க அணி கிரீம் ஸ்மித், ஷான் பொல்லாக், நீக்கி போஜி, குரோஞ்சி, லேன்ஸ் குலுசினர், நீட்டினி, கீப்ஸ், காலிஸ், ஜான்டி ரோட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடியும் அந்த அணியால் இன்றுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை.
1992 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஜிம்பாப்வே என 9 அணிகள் பங்கு பெற்றது.
லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
அரையிறுதி போட்டிகள்
அதில் புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து அணி 8 போட்டிகளில் 7 வெற்றி பெற்று முதலிடத்திலும், இங்கிலாந்து அணி ஐந்து வெற்றி பெற்று இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்க அணி 5 வெற்றி பெற்று மூன்றாவது இடத்திலும் பாகிஸ்தான் அணி 4 வெற்றி பெற்று அரையிறுதிக்கு நான்கு அணிகளும் தகுதி பெற்றது.
முதல் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணி மோதின.
இன்சமாம் உள் ஹாக் 37 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்த உதவினார்.
இரண்டாவது அரையிறுதி போட்டி மார்ச் 22ஆம் தேதி சிட்னி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணி மோதின.
இங்கிலாந்து 252 ரன்கள்
தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் வெஸல்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
மழை குறுக்கிட்டதால் அந்த போட்டி 45 ஓவர்களாக குறைக்கப்பட்டு இங்கிலாந்து அணி பேட்டிங்கை ஆடியது.
இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 252 ரன்கள் எடுத்தது அந்த அணியில் அதிகபட்சமாக கிக் 83 ரன்கள், ஸ்டீவாட் 33 ரன்கள், பேர்பிரதர் 28 ரன்கள், ரிவி 25 ரன்கள் எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் டொனால்ட் மற்றும் பிரிங்கிலே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்காக்கு சோகம்
45 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 42.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.
களத்தில் ரிச்சர்ட்ச்சன் 13 ரன்களுடனும் மெக்மில்லன் 21 ரன்களுடன் இருந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு 13 பந்துகளில் 22 ரன்கள் தேவையாக இருந்த பொழுது மழை மீண்டும் குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தியது.
சிறிதுநேரத்தில் மழைவிட நடுவர்கள் ஆட்டத்தை ஓவர்களை குறைக்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.
இங்கிலாந்து வெற்றி
நடுவர்கள் எடுத்த முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயித்தார்கள்.
இது சாத்தியமே இல்லாத ஒன்று என்றாலும் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த முடிவை நடுவர்கள் எடுத்தார்கள்.
மீண்டும் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஒரு பந்தில் 1 ரன் மட்டுமே எடுக்க சோகத்துடன், டிஎல் முறைப்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தார்கள்.
ஒரு பந்தில் 20 ரன்கள் எடுக்க வேண்டும் என்று மைதானத்தில் உள்ள தொலைக்காட்சியில் பார்த்தவுடனே தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினார்கள்.
தென்னாப்பிரிக்கா அணி 43 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஹட்ஸன் 46 ரன்கள், ஜான்டி ரோட்ஸ் 43 ரன்கள், குய்ப்பர் 36 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் இல்லிங் வொர்த் மற்றும் ஸ்மால் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென்ஆப்பிரிக்கா அணி கண்டிப்பாக இந்த முறை உலகக்கோப்பையை வென்று விடும் என்று நம்பி இருந்த அந்த நாட்டு ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது இந்த முடிவு.
வரலாறு படைக்குமா?
வரலாற்றிலேயே இதுவே முதல் முறை இது மாதிரி டக்வெர்த் முறை. அன்றைய சோகம் இன்று வரை தென் ஆப்பிரிக்காவிற்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அரையிறுதிக்கு நுழையும் தென்னாப்பிரிக்கா அணியால் இறுதிப்போட்டிக்கு இதுவரை நுழைந்ததே இல்லை.
வருகிற அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று இந்த சோகமான சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைக்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகில் பல்லாரயிரம் மக்களை கொன்றுள்ளது. இந்த கொரோனா வைரஸ் எத்தனை நாள் உயிர் வாழும்? Corona virus Life Time.
குறிப்பாக சீனா இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த நோய் பாதிப்பு அதிகமாகி வருகிறது.
இந்தியாவில் அதிக முன்னெச்சரிக்கை எடுத்து மக்களை காப்பாற்றுவது என மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகின்றன.
இன்று அதாவது மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டுள்ள.
மக்கள் சுய ஊரடங்கு என்ற பெயரில் மக்கள் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியேறும் இருமல் தும்மல் மூக்கிலிருந்து வெளியேறும் நீர் போன்ற சில உபாதைகளால் இந்த வைரஸ் மற்றவர்களையும் பாதிக்கும்.
மக்கள் யாரும் சில நாட்களுக்கு முக்கியத் தேவைக்கு மட்டும் வெளியில் வந்து மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கொரோனா வைரஸ் எத்தனை நாள் உயிர் வாழும்?
corona virus life circle
*பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் 2-6 நாட்கள்
* ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 2-4 நாட்கள்
* அட்டைப்பெட்டியில் 24 மணி நேரம்
* தாமிரத்தில் 4 மணி நேரம்
* காற்றில் 3 மணி நேரம்
* அலுமினியத்தில் 2 – 8 மணி நேரம்
* காகிதத்தில் 4 நாட்கள்
* மரப் பொருட்களில் 4 நாட்கள்
* கண்ணாடி பொருள்களில் 5 நாட்கள்
மக்கள் அனைவரும் மற்றவர்களிடம் பேசும் போதும் நிற்கும் போதும் ஒரு மீட்டர் தூரமாவது இடைவெளிவிட்டு நின்று பேச வேண்டும்.
சாப்பிடும்போதும் வெளியில் சென்றாலும் கையை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். வெளியில் செல்லும் தேவை இருந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லவும்.
பிரதமர் மோடி கேட்டுக் கொண்ட மக்கள் சுய ஊரடங்குக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை தற்போது ட்விட்டர் பக்கம் நீக்கியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளுக்கு பரவி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது.
இதை தடுக்க பல நாடுகள் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இருந்தபோதிலும் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் எளிதாக பாதிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது இடத்திலுள்ள இந்தியா குறைந்த மக்களையே தாக்கியுள்ளது இந்த வைரஸ்.
மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியா பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிலும் நம் நாட்டின் பிரதமர் இருக்கும் எல்லா வழிகளிலும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
குறிப்பாக தமிழ் நாடு அரசு மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மக்களுக்கு தேவையான நிறைய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
பிரதமர் மோடி பாராட்டும் அளவிற்கு தமிழ்நாடு அரசு மக்களுக்கு கொரோனா வைரஸ் அண்டாமல் தடுப்பதற்கு பல ஏற்பாடுகளை செய்து வருகிறது.
நேற்றைய முன்தினம் மோடி நாளை மார்ச் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் மக்கள் சுய ஊரடங்கு ஏற்படுத்திக்கொள்ளவும் அறிவித்திருந்தார்.
அதன்படி பல நடிகர் நடிகைகள் இதற்கு ஆதரவு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர்.
இன்று நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த், மம்முட்டி, தனுஷ், நானி போன்ற நடிகர்கள் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவில் பேசியதாவது : “பிரதமர் மோடி அறிவித்துள்ளபடி நாளை யாரும் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணிவரை வெளி வர வேண்டாம்.
பிரதமர் அவர்களின் சொல்லுக்கு மதிப்பளித்து மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும்.
கொரோனா வைரஸ் 12 லிருந்து 14 மணி நேரம் உயிருடன் இருப்பதால் நாளை நீங்கள் வெளிவராமல் இருந்தால் கொரோனா வைரஸ் இரண்டாவது கட்டத்தை தான்டாமல் அழிந்துவிடும் என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.
சமூக வலைதளமான ட்விட்டரில் இது தவறான கருத்து என்றும் எங்களுடைய டிவிட்டர் விதிமுறைக்கு புறம்பானது என்றும் அவருடைய வீடியோவை நீக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் இத்தாலியில் அதிக மக்களை கொத்துக் கொத்தாக கொன்று வருகிறது.
அந்த நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சொன்னது என்னவென்றால் நம்முடைய இருமல், தும்மல் மற்றும் மூக்குச் சளியில் இருந்து ஏற்படும் நீரினால் பல நாட்களுக்கு கொரோனா வைரஸ் உயிர்வாழும் என்றும் கூறியுள்ளார்கள்.
அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லாத 12 லிருந்து 14 மணிநேரம் வைரஸ் உயிர் வாழும் என்று தவறான தகவலை குறிப்பிட்டது.
இந்த வீடியோவை நீக்க இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது
ஆனால் அவர் எழுத்துப்பூர்வமாக குறிப்பிட்டு இருந்த சில விஷயங்களை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மிகவும் பிரமாதமான நாள். உங்களின் முயற்சிகள் வெற்றியில் முடியும். குடும்பத்தில் அன்பாக இருப்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று சற்று ஏமாற்றத்தை சந்திப்பீர்கள். பணியில் திருப்தியாக ஈடுபட இயலாது. குடும்ப பிரச்சனைகள் தோன்றும். தனலாபம் குறைவாக இருக்கும். பல் வலி வர வாய்ப்புண்டு.
இன்று குழப்பமான நாளாக இருக்கும். பணியிடத்தில் மந்தமான சூழல் நிலவும். வீட்டில் அமைதி குறையும். பணத்தால் பிரச்சனைகள் வரும். பொருளாதார நிலை தொய்வடையும். கண் பிரச்சனைகள் வரலாம்.
இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு நல்ல நாள். பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் துணையிடம் நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உணர்ச்சி வச படுதலை தவிர்க்கவும். வேலையில் கவனமாக இருக்கவும். குடும்ப சுப காரிய பேச்சுகளை தள்ளி போடவும். பண புழக்கம் குறையும். தோல் பிரச்சனைகள் வரலாம்.
இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியில் குழப்பமாக இருக்க வாய்ப்புண்டு. வீட்டில் கவனமாக பேசவும். தன லாபம் மந்தமாக இருக்கும். கால்களில் பிரச்சனைகள் வரலாம்.
இன்று பதட்டமான சூழல் நிலவும். தியானம் அவசியம். பணிசுமை அதிகமாக இருக்கும். உறவினர்களால் பிரச்சனைகள் வரலாம். செலவு அதிகரிக்கும். பணியால் சோர்வுடன் இருப்பீர்கள்.
இன்று மனம் அமைதியாக இருக்காது. தொழில் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நட்புணர்வுடன் பேசுங்கள். பண இழப்பு ஏற்படலாம். முதலீடுகளை தவிர்க்கவும்.வயிறு கோளாறுகள் ஏற்படலாம்.
பைரவரை வழிபட கவலைகள் குறையும்.
22/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
Thalaivar170; அண்ணாத்தாவே முடியல அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்170 படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோர் நடிக்கின்றனர்.
ஹைதராபாத்தில் நடந்து வந்த படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர்169 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.
கமல் ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார் என்று ஏற்கனவே அறிவிப்பு வந்தது.
தற்போது தலைவர்170 (Thalaivar170) படம் குறித்து தகவல் வெளியாகி வருகிறது. அதில், ரஜினியின் தலைவர்170 படத்தை ராகவா லாரன்ஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினியின் தீவிர ரசிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். ரஜினியும், ராகவா லாரன்ஸ் இருவருமே ராகவேந்திரா சுவாமியின் தீவிர பக்தர்கள்.
ரஜினிக்கு ராகவா லாரன்ஸ் கதை கூறியதாகவும், அந்த கதை அவருக்கு பிடித்துப் போனதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை. தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால், தலைவர்170 படத்திலும் அவர் நடிப்பார். அதுவும் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் என்று கூறப்படுகிறது.
லக்ஷ்மி பாம் என்ற படத்தை இயக்கி வரும் ராகவா லாரன்ஸ் அடுத்து தலைவர்170 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dhanush; நாளை மாலை 5 மணிக்கு கைதட்டி ஆரவாரம் செய்வோம்! கொரோனா வைரஸ் குறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து வீடியோ (Corona Virus Video) பதிவிட்டுள்ளார். உலக நாடுகளே அஞ்சும் அளவிற்கு கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய இந்த தொற்று நோய் கிருமியிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
அதற்காக நாம் வீட்டை விட்டு (Janta Curfew) வெளியில் வராமல் இருப்பது நல்லது தான்.
உலகத்தை கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் வரும் நிலையில். சீனாவில் தொடங்கி நூறு நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களின் உயிரை காவு வாங்கி வருகிறது.
தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் (COVID19) தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில், நாம் அனைவரும் அடிக்கடி கை கழுவி கொள்ள வேண்டும்.
வீட்டிற்குள்ளாகவே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா வைரஸின் ஆயுள்காலம் வெறும் 12 மணிநேரம் மட்டுமே.
அதன் பிறகு தானாகவே இறந்துவிடும். அந்த 12 மணி நேரத்திற்குள்ளாக ஒருவரது உடலுக்குள் நுழைந்து அவரது உடலிலிருந்து மற்
றவர்களது உடலுக்கு பரவும். இதுதான் கொரோனா வைரஸின் செயின்.
இந்த ஒருநாள் அதான் நாளை மார்ச் 22 ஆம் தேதி ஒவ்வொருவரது நோக்கமும் கொரோனா பரவுவதை தடுப்பது தான்.
ஆதலால், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கிட்டத்தட்ட 14 மணிநேரம் யாருமே வீட்டை விட்டு வெளியில் வரவில்லை என்றால், அங்கங்கு இருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எந்த உடலும் கிடைக்காமல் தானாகவே இறந்துவிடும்.
இது போன்று செய்தி வெளியாகி வரும் நிலையில், நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
ஒரு மூன்று மாதங்களுக்கு முன்பு இப்படியொரு சூழ்நிலை வரும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்த வைரஸ் தொடர்ந்து பரவாமல் தடுப்பது நமது கையில் தான் இருக்கிறது.
ஜந்தா கர்பியூ (Janta Curfew – மக்கள் ஊரடங்கு) பிரதமர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை, நாம் யாரும் வீட்டில் இருந்து வெளியில் வராமல் இருக்க வேண்டும்.
அப்படி வராமல் இருந்தால், இந்த கொரோனாவை எதிர்த்து மருத்துவர்களும், அரசும் போராடுவதற்கு உதவியாக இருக்கும்.
டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர் அவர்களது உயிரை மட்டும் பணையம் வைத்து போராடவில்லை.
அவர்களது குடும்பத்தினரையும், குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகள் ஆகியோரது உயிரையும் பணையம் வைத்துதான் போராடுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்காகவும் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், அனைவருமே வீட்டில் இருப்பதுதான்.
இந்த மக்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்தால் கூட, தேவைப்பட்டால் மட்டுமே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வீட்டில் இருந்து வெளியில் செல்வோம்.
இளைஞர்கள் பலரும் எங்களுக்கு என்ன ஆகும்? அதெல்லாம் ஒன்றும் செய்யாது என்ற அஜாக்கிரதையும், கவனக்குறைவும் இருப்பதாக கேள்விப்படுகிறேன்.
நீங்கள் அப்படியிருப்பதால், உங்களது குடும்பத்தினருக்கே கொரோனாவை பரப்பும் ஒருவராக மாறிவிடுகிறீர்கள்.
அரசும், மருத்துவர்களும் என்னவெல்லாம் பாதுகாப்பு குறித்து கூறியிருக்கிறார்களோ அதையே பின்பற்றுங்கள். நாமும் பாதுகாப்பாக இருப்போம்.
மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம். நாளை மாலை 5 மணிக்கு நமக்காக போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்காக கதவு முன்பாகவோ, அல்லது ஜன்னல் முன்பாகவே நின்று கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களுக்கு நமது ஆதரவை வெளிப்படுத்துவோம்.
ஜெய்ஹிந்த்! என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 100 நாடுகளுக்கு மேல் பரவி பல்லாயிரம் மக்களை காவு வாங்கி வருகிறது. இத்தாலியில் கொத்து கொத்தாக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது அதிலும் தமிழகம் சிறந்து விளங்கி வருகிறது.
பல்வேறு நாடுகள் என்ன செய்வது என்று தவித்து வரும் இவ்வேளையில் வைரசை விட வதந்தியும் அதிவேகமாக பரவி வருகிறது.
ஒவ்வொரு நாளும் வாட்ஸ்அப் பகிர்வு, யூடியூப் முட்டாள்தனமான வீடியோக்கள், ஃபேஸ்புக் பகிர்வு, டிவிட்டர் பகிர்வு போன்ற தவறான பகிர்வுகள் கொரோனாவை நோயைப்பற்றி பகிர்ந்து வருகிறார்கள்.
சிலர் நாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
நேற்று தவறான வதந்தியை பரப்பிய ஹீலர்பாஸ்கர் கைது செய்யப்பட்டிருக்கும் வேலையில் இன்று சூரியனிலிருந்து வெளிவரும் 4 ரேஸ் அதிர்வலை மூலம் பரவுகிறது என்றும், சூரியனால் அதிக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என்றும் புரளியை பரப்பி வருகிறார்கள்.
சிலர் வீட்டில் அமர்ந்து ஏதாவது சொல்லவேண்டும் என்று தன் சுய கருத்துக்களையும் தன் சொந்த கற்பனைகளை வளர்த்து பொதுவாக எழுதி வதந்திகளை பரப்புகிறார்கள்.
ஆக மக்கள் அனைவரும் வதந்திகளை நம்பாமல் உண்மையை ஆராய்ந்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் நோக்கத்தில் பகிர வேண்டும்.
தவறான கருத்துக்களை பகிர்வதன் மூலம் பல பாதிப்புகளை மக்கள் மட்டுமில்லை இந்த நாடும் சந்திக்கும்.
கொரோனா வைரஸ் மட்டுமில்லாமல் வதந்திகளும் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும்.